அதானி நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட திட்டங்களினால் நாட்டுக்கு பாதிப்பு ஏற்படும்: மின்சார சபை கூட்டு தொழிற்சங்கம்

Date:

மன்னார் மற்றும் பொன்னேரியில் பகுதிகளில் இரண்டு காற்றாலை மின் திட்டங்களை நிறுவுவதற்கு அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்திற்கு அனுமதி வழங்குவது நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என இலங்கை மின்சார சபை கூட்டு தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அதேநேரம்,இரண்டு காற்றாலை மின் திட்டங்களை நிறுவ அனுமதிப்பதன் மூலம் நாட்டின் பல துறைகள் பாதிக்கப்படும் என அதன் அழைப்பாளர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்துள்ளார்.

அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்திற்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் முதலீடு செய்வதற்கு தற்காலிக அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சனா விஜேசேகர டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இலங்கை மின்சார சபையின் கூட்டு தொழிற்சங்க கூட்டமைப்பின் அழைப்பாளர் ரஞ்சன் ஜயலால், இது தொடர்பான இரண்டு திட்டங்களை நிறுவனத்திற்கு வழங்குவதில் தமக்கு உடன்பாடில்லை என தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

விவாகரத்து மற்றும் முஸ்லிம் திருமணச் சட்டம் தொடர்பான இரண்டு தனிநபர் மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு!

இலங்கையின் தனிநபர் சட்டங்களை நவீனமயமாக்கும் நோக்கில், ஜனாதிபதி சட்டத்தரணியும் நாடாளுமன்ற உறுப்பினருமான...

கொழும்பிலுள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தில் ‘காஷ்மீர் ஒற்றுமை தினம்’ அனுஷ்டிப்பு

கொழும்பிலுள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தில் காஷ்மீர் ஒற்றுமை தினத்தை முன்னிட்டு கருத்தரங்கு...

கொழும்பில் நாளை முதல் விசேட போக்குவரத்து திட்டம்.

20 க்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் நடைபெறும் காலப்பகுதியில்...

நாட்டின் சில பகுதிகளில் பி.ப. 2.00 மணிக்கு பின் 50 மி.மீ. இற்கும் அதிக மழைக்கு சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் கிழக்கு, ஊவா, மத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை, அம்பாந்தோட்டை...