அதிக வருமானம் பெறுபவர்களுக்கு வேறு முறையில் தண்ணீர் கட்டணத்தை அறவிட தீர்மானம்!

Date:

அதிகரிக்கப்படுகின்ற நீர் கட்டணத்தை, வருவாய் திறனுக்கு ஏற்பட அறவிடுவதற்கு புதிய திட்டத்தை தயாரிப்பதில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.

அண்மையில் நீர் கட்டணம் அதிகரிப்பு தொடர்பாக யோசனையை விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அமைச்சரைவையில் முன்வைத்தார்.
இந்த யோசனைக்கு தற்போது அனுமதி கிடைக்கப்பபெற்றுள்ளதுடன் அதனை விரைவாக அமுல்படுத்த நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் அதிக வருமானம் பெறும் தரப்பினருக்கும் குறைந்த வருமானம் பெறும் தரப்பினருக்கும் ஒரு அலகு நீருக்கு ஒரே அளவான கட்டணத்தை செலுத்துகின்றனர்.
இம்முறைமைக்கு பதிலாக, குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு சலுகைகள் வழங்கவும், அதிக நீரை பயன்படுத்தும் அதிக வருமானம் பெறுபவர்களுக்கு வேறு முறையில் கட்டணத்தை அறவிடவும் நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தீர்மானித்துள்ளது.
இதற்கமைய வீட்டுப்பாவனைக்கான நீர்வசதியை மாத்திரம் பெறுபவர்களின் புதிய நீர்கட்டணங்களின் படி, குறைந்தளவிலேயே கட்டணம் அதிகரிக்கரிக்கப்பட்டள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Popular

More like this
Related

DPL-2026 Season 5 சாம்பியனாக தெல்தோட்டை டிராகன்ஸ் அணி தெரிவு

ஈதுல் பித்ர் நோன்பு பெருநாளை முன்னிட்டு தெல்தோட்டை, வாலிபர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட...

போலி விமான டிக்கெட்டுகள் தள்ளுபடிகள் குறித்து பொலிஸார் எச்சரிக்கை!

விமான டிக்கெட்டுகளுக்கு மலிவான அல்லது சிறப்புத் தள்ளுபடிகளை வழங்குவதாகக் கூறி, சமூக...

இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்திற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 100 மில். அமெரிக்க டொலர்கள்

இலங்கை நெருக்கடி நிலையிலிருந்து மீண்டு, மிகவும் நெகிழ்ச்சியான பொருளாதாரத்தை நோக்கி நகர்ந்து...

எரிபொருள் QR குறியீடு தொடர்பில் 1000 முறைப்பாடுகள்!

தவறான முறையில் அல்லது பிறருடைய QR குறியீடுகளைப் பயன்படுத்தி எரிபொருள் பெற்றமை...