அருட்தந்தை ஜீவந்த பீரிஸை பிணையில் விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு!

Date:

சட்டத்தரணிகள் ஊடாக இன்று (ஆகஸ்ட் 12) நீதிமன்றத்தில் ஆஜராகிய அருட்தந்தை ஜீவந்த பீரிஸை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேகநபரான ஜீவந்த பீரிஸை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.

எனினும் இந்தக் கோரிக்கையை நிராகரித்த கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே, தந்தை ஜீவந்த பீரிஸை தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், தந்தை ஜிவந்த பீரிஸ் வெளிநாடு செல்வதற்கு தடை விதித்து நாளை பொலிஸாரிடம் சென்று வாக்குமூலம் வழங்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இந்த புகார் மனுவை  மீண்டும் ஆக. 26ஆம் திகதி  விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...