அவுஸ்திரேலியா செல்ல முயற்சித்த 46 பேர் நாடு கடத்தப்பட்டனர்!

Date:

இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் படகு மூலம் அவுஸ்ரேலியா செல்ல முயற்சித்த 46 பேர் இன்று நாடு கடத்தப்பட்டுள்ளனர். இவர்களை ஏற்றி அவுஸ்திரேலிய எல்லை பாதுகாப்பு படையினரின் கப்பல் கொழும்பு துறைமுகத்தை இன்று வந்தடைந்துள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து பலர் சட்டவிரோதமான முறையில் படகு மூலம் வெளிநாடுகளுக்கு பபயணித்துள்ளனர் அத்துடன் பலர் நாட்டை விட்டு வெளியேற முயற்சித்த போது கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதும் கூறிப்பிடத்தக்கது.

இந்த நிலையிலேயே இலங்கையைச் சேர்ந்த 46 சட்டவிரோத புகலிடக்கோரிக்கையாளர்களின் படகினை கடந்த ஜூலை மாதம் 21ம் திகதி அவுஸ்ரேலிய கடற்பரப்பிற்குள் நுழைந்த போது அந்நாட்டு எல்லை பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஜூலை 6 ஆம் திகதி மட்டக்களப்பு வாழைச்சேனையிலிருந்து மீன்பிடி படகில் பயணத்தை ஆரம்பித்தாக குறிப்பிடப்படுகிறது.

கைது செய்யப்பட்டவர்கள் வாழைச்சேனை, மட்டக்களப்பு, பாசிக்குடா, அம்பாறை, பிபில மற்றும் மூதூர் பகுதிகளை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. இதனையடுத்து 46 பேரை ஏற்றிய அவுஸ்திரேலிய எல்லை பாதுகாப்பு படையினரின் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

Popular

More like this
Related

திஹாரிய தன்வீர் அகடமி ஏற்பாடு செய்த ‘நபிகள் நாயகம்’ பற்றிய கண்காட்சி தொடர்பான படங்கள்!

திஹாரிய தன்வீர் அகடமி ஏற்பாடு செய்த 'பிரபஞ்சத்துக்கு அருளான முஹம்மது நபி ஸல்லல்லாஹு...

165,512 வாகன இலக்கத் தகடுகள் இன்னும் நிலுவையில்!

புதிய வாகன இலக்கத் தகடுகளை வழங்கும் பணியில் ஏற்பட்டுள்ள தாமதத்தை போக்குவரத்து,...

நவம்பர் 30ஆம் திகதி முதல் பஸ்களில் வங்கி அட்டைகள் மூலம் கட்டணம் செலுத்த வாய்ப்பு.

டிக்கெட் இயந்திரங்கள் மூலம் பயணச்சீட்டுக்கள் வழங்கப்படும் பஸ்களில், பயணிகள் வங்கி அட்டைகளைப்...

30ஆவது வருட நிறைவையிட்டு கொழும்பு பங்குச் சந்தையில் மணியோசை எழுப்பிய CDB

நிதியியல் விசேடத்துவம் மற்றும் புத்தாக்கத்தில் தனது வலுவான இடத்தை வலியுறுத்தியபடி, இலங்கையின்...