இலங்கையின் பொருளாதார நெருக்கடி தொடர்பில் இந்தியா மற்றும் மாலைதீவு அதிகாரிகள் கரிசனை!

Date:

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி குறித்து இந்தியா மற்றும் மாலைதீவு அதிகாரிகள் கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாலைதீவு சபாநாயகர் மொஹமட் நஷீட் மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்தியப் பெருங்கடல் தீவு நாடுகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து விவாதித்திருந்ததாகவும், இலங்கையின் நிதி நெருக்கடி எங்களை கவலையடையச் செய்துள்ளது எனவும் குறித்த இருவரும் தெரிவித்துள்ளனர்.

பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கு, வெளிநாடுகளுடன் நிவாரண முயற்சிகளை ஒருங்கிணைக்க முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் மாலைதீவு சபாநாயகர் மொஹமட் நஷீட்டிற்கு நியமனம் வழங்கப்பட்டிருந்தது என்பதுக் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கல்முனை காதி நீதிமன்ற நீதிபதி, மனைவி இலஞ்சக் குற்றச்சாட்டில் கைது

இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கல்முனை காதி நீதிமன்ற நீதிபதியும் உடந்தையாக...

பாதுகாப்பு பிரதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான நடவடிக்கைகள் பின்னர் அறிவிக்கப்படும்: சபாநாயகர்

பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவுக்கு எதிரான...

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் கைது!

தேசிய லொத்தர் சபையின் (NLB) முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லோலுவ இன்று...

நாட்டின் சில இடங்களில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (19) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...