இலங்கை கடலோரப் பகுதிகளில் இந்தியா தனது கண்காணிப்பு நடவடிக்கைகளை அதிகப்படுத்தியுள்ளது!

Date:

இலங்கைக்கு அருகில் உள்ள கடலோரப் பகுதிகளில் இந்தியா தனது கண்காணிப்பு நடவடிக்கைகளை அதிகப்படுத்தியுள்ளது.

இந்திய பாதுகாப்புப் படையினர் நேற்று முதல் விமானம் மற்றும் தரைவழியாக தங்களது கண்காணிப்பு நடவடிக்கைகளை பல மடங்கு அதிகரித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பெரும்பாலான கண்காணிப்பு பணிகள் ராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடி பகுதிகளில் மேற்கொள்ளப்படுவதாகவும், இதற்காக அதி நவீன கடல்சார் கண்காணிப்பு ஹெலிகாப்டர்கள் மற்றும் அதிநவீன விரைவு தாக்குதல் கப்பல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இதுகுறித்து இந்திய கடற்படையினர் கூறியதாவது,

வெளிநாட்டினர் நாட்டிற்குள் வருவதை தடுக்க கடல் எல்லை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், சீனாவின் யுவான் வாங்-5 கப்பல் உயர் தகவல் தொடர்பு வசதிகளுடன் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளமை இந்திய பாதுகாப்புப் படையினரின் கரையோரப் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரிக்க வழிவகுத்துள்ளதாக விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்தியா தனது பிம்பத்தைக் காண்பிக்கும் நடவடிக்கையாக இந்தக் கண்காணிப்பு நடவடிக்கைகளை அதிகரித்துள்ளதாக சில இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

நேற்று ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்த யுவான் வாங்-5 கப்பல் எதிர்வரும் 19ஆம் திகதி வரை இலங்கையில் நங்கூரமிடப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

இலங்கையின் சுகாதாரப் பணிகளை வலுப்படுத்த 175,000 டொலர்களை விடுவித்த உலக சுகாதார ஸ்தாபனம்

இலங்கையின் 25 மாவட்டங்களிலும் கடுமையான வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு...

அனர்த்தம் காரணமாக மூடப்பட்டிருந்த பிரதான வீதிகள் திறப்பு!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை மற்றும் அனர்த்த நிலைமை காரணமாகப் போக்குவரத்திற்குத்...

ஜனாதிபதி தலைமையில் அவசர அமைச்சரவைக் கூட்டம்.

நாட்டின் தற்போதைய சூழ்நிலை தொடர்பில் ஆராயும் விசேட அமைச்சரவைக் கூட்டம் ஒன்று...

தொற்றுநோய் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், வரும் நாட்களில் தொற்று நோய்கள்...