இலங்கை குறித்து பிரித்தானிய அரசின் முக்கிய தீர்மானம்!

Date:

இலங்கையின் பாதுகாப்பு நிலைமை தற்போது மிகவும் ஸ்திரமாக உள்ளதாக சுட்டிக்காட்டி முன்பு விதித்திருந்த பயண ஆலோசனையை பிரித்தானிய அரசாங்கம் இரத்து செய்துள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள், ஊரடங்கு உத்தரவு மற்றும் அவசரகால நிலை பிரகடனத்தை அடுத்து மே மாதம் பயண ஆலோசனை பிரித்தானிய புதுப்பித்தது.

இந்நிலையில் இலங்கைக்கான பயண ஆலோசனையை இரத்து செய்துள்ள பிரித்தானியா, பாதுகாப்பு நிலைமை ஓரளவு மேம்பட்டிருந்தாலும் எரிபொருள், மருந்து தட்டுப்பாடு நிலவுவதாக கூறியுள்ளது.

ஆகவே இலங்கைக்கு பயணிக்கத் திட்டமிடும் தமது நாட்டவர்களை தேவையான மருந்துகளை எடுத்துச் செல்லவும், போக்குவரத்து தொடர்பாக உறுதி செய்யுமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும், பிரான்ஸ், நோர்வே, சுவிட்ஸர்லாந்து முதலான நாடுகளும் இலங்கை தொடர்பான பயண அறிவுறுத்தல்களை நீக்கியுள்ளன.

Popular

More like this
Related

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...

*பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல் உச்சம்: கத்தார், சவூதி அரேபியாவின் தலையீடு!

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே நடந்த தாக்குதலில் பாகிஸ்தான் தரப்பில் சுமார்...

எகிப்தில் காசா போர் நிறுத்த மாநாட்டுக்கு செல்லும் வழியில் 3 கத்தார் தூதர்கள் விபத்தில் சிக்கி பலி

எகிப்தின் கடற்கரை நகரமான சர்ம் எல்-ஷேக்கிற்கு அருகில் நடந்த கார் விபத்தில்...