உள்நாட்டு விவகாரங்களில் தலையிடும் நாடுகளுக்கு ஜனாதிபதியின் வேண்டுகோள்!

Date:

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் சீன தூதுவர் ‘Qi Zhenhong’ அவர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி டுவிட்டர் செய்தியில் இந்த சந்திப்பு பற்றி குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, ஒரே சீனா கொள்கை மற்றும் நாடுகளின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு தொடர்பான ஐக்கிய நாடுகளின் சாசனத்தின் கோட்பாடுகளுக்கு இலங்கையின் உறுதியான உறுதிப்பாட்டை சீன தூதுவர் முன்னிலையில் மீண்டும் வலியுறுத்தியதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய உலகளாவிய பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் ஆத்திரமூட்டல்களில் இருந்து நாடுகள் விலகிக் கொள்ள வேண்டும் என ஜனாதிபதி தனது டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

பரஸ்பர மரியாதை மற்றும் நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடாமை அமைதியான ஒத்துழைப்பு மற்றும் மோதலின்மைக்கு முக்கியமான அடித்தளங்கள் என்று அவர் மேலும் கூறுகிறார்.

Popular

More like this
Related

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...

சீன உதவியை விரிவாக்க கோரிக்கை: அமைச்சர் விஜித ஹேரத் சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.

தென்னாப்பிரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு சீனா திரும்பும் வழியில், இன்று காலை...

மசகு எண்ணெய் (Crude Oil): உலக பொருளாதாரத்தின் நாடித்துடிப்பு

Writer: Eng.S.M.M.Rifai சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இத்தலைப்பு, நமது பாடத்திட்டங்களில்...

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வலுவான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...