எரிபொருள் பிரச்சினை காரணமாக தனியார் பேருந்துகள் 50 வீதத்தால் குறைக்கப்படும்!

Date:

எரிபொருள் பிரச்சினை காரணமாக நாளை  தனியார் பஸ்கள் 50 வீதத்தால் குறைவடையும் என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கங்கள் தெரிவிக்கின்றன.

உரிய முறையில் எரிபொருள் கிடைத்தால் அடுத்த வாரம் முதல் பஸ்களை வழமையாக இயக்க முடியும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை தனியார் பஸ்களுக்கு எரிபொருளை வழங்குவதற்காக கொழும்பு பஸ்டன் மாவத்தையில் புதிதாக திறக்கப்பட்டுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு எரிபொருளை வழங்குமாறு மாகாணங்களுக்கு இடையிலான தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

எரிபொருளை உரிய முறையில் வழங்கினால் மாகாணங்களுக்கிடையிலான தனியார் பஸ்களை பிரச்சினையின்றி இயக்க முடியும் எனவும் அதன் தலைவர் சரத் விஜித குமார குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

ஓய்வுபெற்ற ஜனாதிபதிகளின் பாதுகாப்பு வாகனங்களை மீள ஒப்படைக்க முடியும்: அமைச்சர் ஆனந்த விஜேபால

ஓய்வுபெற்ற ஜனாதிபதிகளின் பாதுகாப்பு வாகனங்களை, அவர்கள் கோரினால் மீண்டும் ஒப்படைக்க முடியும்...

இலங்கையில் ஆண்டுதோறும் 1.6 மில்லியன் தொன் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுகிறது!

இலங்கையில் ஆண்டுதோறும் 1.6 மில்லியன் தொன் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுவதாகவும், இதில் 70...

போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் பொலிஸ் மா அதிபருக்கு 8000 முறைப்பாடுகள்

போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் பொலிஸ் மா அதிபரின் இலக்கத்திற்கு...

காசா மீதான இஸ்ரேலின் போர் தொடங்கி 2 ஆண்டுகள் நிறைவு!

காஸாவில், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான போர் தொடங்கி 2 ஆண்டுகள்...