காலி முகத்திடலுக்கு ஏற்பட்ட நட்ட ஈட்டை ‘கோட்டா கோ கம’ போராட்டக்காரர்களே செலுத்த வேண்டும்: பிரசன்ன

Date:

நீண்டகாலமாக போராட்டக்காரர்களின் ஆக்கிரமிப்பு காரணமாக காலி முகத்திடலுக்கு ஏற்பட்ட சேதங்களை மீட்பதற்கு தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஏப்ரல் 2022 இன் பிற்பகுதியில் தொடங்கிய அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்கள், காலி முகத்திடலில் உள்ள பண்டாரநாயக்க சிலைக்கு அருகில், ‘கோட்டா கோ காம’ என அழைக்கப்படும் போராட்ட  களம் மையமாகக் கொண்டிருந்தன.

123 நாட்கள் இடைவிடாத போராட்டங்களுக்குப் பிறகு, கடந்த புதன்கிழமை ஆகஸ்ட் 10 அன்று ஆர்வலர்கள் வளாகத்தை விட்டு வெளியேறினார்கள்.

இதனையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் அனுமதியின்றி பிரதேசத்திற்குள் நுழைந்தனர் மற்றும் அரசுக்கு சொந்தமான சொத்துக்களை பலவந்தமாக ஆக்கிரமித்து பல குற்றங்களில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், காலி முகத்திடலுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்து மதிப்பீடு நடத்தப்படும் என்றும், இது தொடர்பாக எடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகள் குறித்து தமக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நடவடிக்கைகள் அனைத்தும் நகர்ப்புற மேம்பாட்டு ஆணைய சட்டத்தை மீறுவதாகும். திருத்தப்பட்ட அந்த சட்டத்தின் சட்ட விதிகளின்படி விடயத்தை கையாள அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் நகர அபிவிருத்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

இலங்கையின் சுகாதாரப் பணிகளை வலுப்படுத்த 175,000 டொலர்களை விடுவித்த உலக சுகாதார ஸ்தாபனம்

இலங்கையின் 25 மாவட்டங்களிலும் கடுமையான வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு...

அனர்த்தம் காரணமாக மூடப்பட்டிருந்த பிரதான வீதிகள் திறப்பு!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை மற்றும் அனர்த்த நிலைமை காரணமாகப் போக்குவரத்திற்குத்...

ஜனாதிபதி தலைமையில் அவசர அமைச்சரவைக் கூட்டம்.

நாட்டின் தற்போதைய சூழ்நிலை தொடர்பில் ஆராயும் விசேட அமைச்சரவைக் கூட்டம் ஒன்று...

தொற்றுநோய் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், வரும் நாட்களில் தொற்று நோய்கள்...