கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்த தோட்ட வேலைத்திட்டம்!

Date:

தேசிய சமாதான சபை மற்றும் ரம்ய லங்கா அமைப்பு ஆகியவை கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக தோட்ட வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.

அதற்கமைய கேகாலை, வவுனியா, புத்தளம், மட்டக்களப்பு மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் இந்த வேலைத்திட்டம் இயங்குகிறது.

இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் 300 பயனாளிகள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

ஐந்து மாவட்டங்களில் உள்ள 1500 பயனாளர்களுக்கு விதைகள் மற்றும் உரம் உரங்கள் இலவசமாக விநியோகிக்கப்படும்.

அதேநேரம், ஐந்து மாவட்டங்களில் ஐந்து குழு பண்ணைகள் தொடங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு தேவையான நிலம் தற்காலிகமாக மத ஸ்தலங்கள் மற்றும் மாவட்ட சர்வமதக் குழு உறுப்பினர்களால் வழங்கப்படும்.

மாவட்ட சர்வமதக் குழுக்களின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்நிகழ்ச்சிக்கு அந்தந்தப் பிரதேச செயலாளர்களின் ஆதரவும் கிடைத்துள்ளது.

இதேவேளை இந்த விடயம் தொடர்பாக ரம்ய லங்கா நிறுவனம், கேகாலை மாவட்ட சர்வமதக் குழு மற்றும் கேகாலை மாவட்டத்தில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுடன் கடநத 8 ஆம் திகதி கலந்துரையாடல் ஒன்றையும் நடத்தியிருந்தது.

Popular

More like this
Related

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை குறைவடையும் வாய்ப்பு!

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை நாளையிலிருந்து (15) குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக,...

சத்தியாகிரக போராட்டத்தை கைவிட்ட விமல்!

புதிய கல்விச் சீர்திருத்தங்களை அடுத்த வருடம் வரை ஒத்திவைப்பதாக அரசாங்கம் அறிவித்ததைத்...

போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்கு பின் இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்: ஐ.நா. தகவல்.

காசாவில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்குப் பிந்தைய இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன...