குடியகல்வு திணைக்களத்தின் முடிவு சட்டவிரோதமானது: ரிட் மனு தாக்கல் செய்தார் பிரித்தானிய பெண்!

Date:

இலங்கையின் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களை சமூக ஊடகங்களில் ஆவணப்படுத்தி வந்த பிரித்தானிய பெண் இன்ஸ்டாகிராமர் கெய்லி பிரேசர், தன்னை இலங்கையிலிருந்து நாடு வெளியேற்றுவதற்கான அதிகாரிகளின் முடிவை எதிர்த்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம், விசா நிபந்தனைகளை மீறியதற்காக பிரேசருக்கு வழங்கப்பட்ட வீசாவை நிறுத்துவதற்கு தீர்மானித்திருந்ததுடன், ஆகஸ்ட் 15 ஆம் திகதி நாட்டை விட்டு வெளியேறுமாறு அவருக்கு அறிவித்திருந்தது.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தன்னிச்சையான முறையில் நாடு கடத்தும் முடிவை ரத்து செய்ய உத்தரவிடுமாறு மனுதாரர் கோரியுள்ளார்.

மனுதாரர், குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டு நாயகம், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்தனர்.

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...