குற்றச்சாட்டில் ஈடுபட்ட இராணுவ அதிகாரிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்கவும்: ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர்!

Date:

குற்றச்சாட்டில் ஈடுபட்ட இராணுவ அதிகாரிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பச்சிலெட் வலியுறுத்தியுள்ளார்.

அதற்காக சர்வதேச நீதி அமைப்பை பயன்படுத்துமாறும் 47 நாடுகளின் தலைவர்களிடம் மிச்சேல் பச்சிலெட் கோரிக்கை விடுத்துள்ளார்.

குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட 58 இராணுவத்தினரையும் கைது செய்ய அரசாங்கம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையிலேயே அவர்களை கைது செய்ய சர்வதேச நீதி அமைப்பை அமுல்படுத்த வேண்டும் என அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

தற்போது இந்தியா, பாகிஸ்தான், ரஷ்யா, சீனா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கு மட்டுமே இலங்கை இராணுவ அதிகாரிகள் செல்லமுடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...