குழந்தையின் பசிக்கு உணவளிக்க பால் மா டப்பாவை திருடிய தந்தை கைது!

Date:

அளுத்கம பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடியில் இருந்து 3,100 ரூபா பெறுமதியான குழந்தைகளுக்காக கொடுக்கப்படும் பால் மாவை திருடிய குற்றச்சாட்டில் 30 வயதுடைய மீனவர் தந்தை ஒருவர் அளுத்கம பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

தனது ஒரு வயது எட்டு மாத குழந்தையின் பசியை போக்க பால் பவுடர் டப்பாவை திருடியதாக அவர் அழுது கொண்டே பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

குறித்த  தந்தை பல்பொருள் அங்காடிக்கு சென்று பால் பவுடர் டப்பாவை எடுத்து அவர் அணிந்திருந்த சட்டையில் மறைக்க முற்பட்டுள்ளார்.

இதனையடுத்து பெண் ஊழியர் ஒருவர் சம்பவத்தை பார்த்து அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிக்கு தகவல் தெரிவித்து சந்தேகநபரான தந்தையை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.

Popular

More like this
Related

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...

நாட்டின் சில இடங்களில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (15) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...