கொழும்பில் வாழ் மக்களின் பேஸ்புக் கணக்குகளை பார்ப்பதே பொலிஸாரின் வாடிக்கையாகிவிட்டது: மனோ

Date:

காலி முகத்திடல் போராட்டத்திற்கு ஆதரவான கொழும்பில் வாழும் மக்களின் முகநூல் கணக்குகளை பார்ப்பது பொலிஸாரின் பிரதான கடமைகளில் ஒன்றாகும் என கொழும்பு மாவட்ட உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற பாராளுமன்ற அமர்விலே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

மேலும், பொலிஸார் கொழும்பில் வாழும் மக்களின் முகநூல் கணக்குகளுக்குள் பிரவேசித்து அதனை பதிவிறக்கம் செய்து,  முடிவடைந்து விட்டதாக நினைத்துக்கொண்டிருக்கும் போராட்டத்தை அடிப்படையாக கொண்டு மக்களின் பின்னால் சென்று அச்சுறுத்துகின்றனர்.

அத்தோடு மக்களைப் பின்தொடர்ந்து கொண்டுபோய் பயமுறுத்துவதுதான் பொலிஸார் பிரதான வேலை, இவ்வாறான செயற்பாடுகளை தாம் முற்றாகக் கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேபோல ஜனாதிபதி மாளிகை ஆக்கிரமிக்கப்பட்ட போது, பொலிஸார் கூட தங்கள் சீருடையில் உடற்பயிற்சி கூடத்தை பயன்படுத்துவதை தான் பார்த்ததாக அவர் கூறினார்.

இவற்றைப் பார்த்த பொதுமக்களும் மிருகக்காட்சிசாலையை பார்ப்பது போல் ஜனாதிபதி மாளிகைக்கு சென்றதாகவும் எனவே பொது மக்களுக்கு இடையூறு செய்ய வேண்டாம் என பொலிஸாரிடம் கோரிக்கை விடுப்பதாகவும் மனோ கணேசன் தெரிவித்தார்.

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...