கொவிட் தடுப்பூசியின் 4வது டோஸை வழங்க ‘மொபைல் தடுப்பூசி’ தளங்கள்!

Date:

கொவிட்- 19 தடுப்பூசியின் நான்காவது டோஸை வழங்குவதற்கு ‘மொபைல் தடுப்பூசி’ தளங்கள் அல்லது வாகனங்களைப் பயன்படுத்த சுகாதார அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

இதன்படி, தேவைகளின் அடிப்படையில் குறிப்பிட்ட இடங்களுக்கு வாகனங்கள் அனுப்பி வைக்கப்படும் என அமைச்சு தெரிவித்துள்ளது.

நான்காவது டோஸ் மேலும் பெரிய மருத்துவமனைகள் மற்றும் சுகாதார வசதிகளால் வழங்கப்படுகிறது.

டெங்கு, கொவிட்-19 மற்றும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை பெரும்பாலான குழந்தைகள் டெங்கு நோயினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளரும் லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளருமான டொக்டர் ஜி.விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

தற்போது பரவி வரும் வைரஸ் காய்ச்சல் குறித்து பெரியவர்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

Popular

More like this
Related

திரைப்படத் துறையில் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு ஜனாதிபதியினால் தீர்வு

சினிமாவின் முன்னேற்றம் நாட்டு மக்களின் ஆன்மீக வளர்ச்சியில் தாக்கம் செலுத்துகிறது என்றும்,...

பெண்களுக்கு எதிரான டிஜிட்டல் வன்முறையை எதிர்த்துப் போராட ‘அவளுக்கான வாக்குறுதி’ பிரசாரத்தை ஆரம்பித்த Inglish Razor.

2025 நவம்பர் 25: பெண்களுக்கு எதிரான வன்முறையை இல்லாதொழிப்பதற்கான சர்வதேச தினத்தை...

மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை: மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்தல்.

நாட்டின் இரண்டு பகுதிகளின் மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்து மண்சரிவு சிவப்பு...

நாட்டில் வேலையின்றி இருக்கும் 365,951 பேர்: பிரதமர் தகவல்!

நாட்டில் தற்சமயம் 365,951 பேர் வேலையின்றி இருப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய...