சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்தனர்!

Date:

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் திரு.சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (30) கொழும்பில் இடம்பெற்றது.

இலங்கை எதிர்கொள்ளும் நிதி நெருக்கடிக்கு தீர்வு காணும் நோக்கில் கலந்துரையாடலின் ஒரு பகுதியாக கொழும்பு மார்க்ஸ் பெர்னாண்டோ மாவத்தையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

சர்வதேச நாணய நிதியத்தின் கலந்துரையாடல் சபையின் தலைவர் Peter Breuer, பிரதித் தலைவர் Masahiro Nozaki, மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் இந்நாட்டின் நிரந்தரப் பிரதிநிதி Tubagus Feridhanusetyawan, ஆகியோருடனேயே இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன்போது நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்களான கலாநிதி ஹர்ஷ டி சில்வா, ஈரான் விக்கிரமரத்ன, கபீர் ஹாசிம், ரவூப் ஹக்கீம், நிரோஷன் பெரேரா மற்றும் பலர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

Popular

More like this
Related

ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஒரு நாள் சேவை இடைநிறுத்தம்!

தனது ஒரு நாள் சேவை உட்பட அனைத்து சேவைகளையும் இன்று (27)...

மத்திய கிழக்கு நெருக்கடி: இலங்கைக்கு உதவத் தயாராக இருப்பதாக ரஷ்யா உறுதி

மத்திய கிழக்கு போர் சூழலால் இலங்கை எதிர்கொள்ளும் எந்தவொரு சவாலையும் முறியடிப்பதற்கு,...

இன்றைய தினமும் வறட்சியான வானிலை

சப்ரகமுவ மாகாணத்திலும் காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் மாலை...

DPL-2026 Season 5 சாம்பியனாக தெல்தோட்டை டிராகன்ஸ் அணி தெரிவு

ஈதுல் பித்ர் நோன்பு பெருநாளை முன்னிட்டு தெல்தோட்டை, வாலிபர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட...