நாட்டில் பல பகுதிகளுக்கு வெள்ளம் மற்றும் மண்சரிவு எச்சரிக்கை!

Date:

அடுத்த 24 மணித்தியாலங்களில் பஸ்கொட, கொட்டபொல, பிடபெத்தர, அக்குரஸ்ஸ, அத்துரலிய, மாலிம்பட, மாத்தறை, திஹாகொட, கம்புருபிட்டிய, முலட்டியன மற்றும் தெவிநுவர ஆகிய பகுதிகளில் தாழ்நிலப் பிரதேசங்களில் கணிசமான அளவு வெள்ளம் ஏற்படக்கூடும் என நீர்ப்பாசன திணைக்களம் எச்சரித்துள்ளது.

மேலும், களுகங்கையின் பெல்மடுல்ல, நிவித்திகல, இரத்தினபுரி, குருவிட்ட, அயகம மற்றும் அலபத்த பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட தாழ்நிலப் பகுதிகளில் அடுத்த 3 மணித்தியாலங்கள் முதல் 24 மணித்தியாலங்களுக்குள் கணிசமான அளவு வெள்ளம் ஏற்படக்கூடும் எனவும் திணைக்களம் எச்சரித்துள்ளது.

இதனடிப்படையில் குறித்த பகுதியினூடாக பயணிக்கும் வாகனங்களும் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களும் இது தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு நீர்ப்பாசன திணைக்களம் கேட்டுக் கொள்கிறது.

இதேவேளை, கடும் மழை காரணமாக காலி, ஹம்பாந்தோட்டை, மாத்தறை, கண்டி, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள பல பிரதேச செயலகப் பிரிவுகள் மண்சரிவு அபாயப் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த பிரதேச செயலகப் பிரிவுகளின் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் இன்று 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...