நாளை முதல் மின்வெட்டு நேரம் அதிகரிக்கும்!

Date:

நாளாந்த மின்வெட்டு இன்று (ஆகஸ்ட் 15) முதல் நீடிக்கப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் முதலாவது அலகில் 2 மின் உற்பத்தி இயந்திரங்கள் செயலிழந்ததன் காரணமாக மின்வெட்டு நீடிக்கப்பட்டுள்ளதாக சபை குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய இன்று (திங்கட்கிழமை) முதல் 3 மணித்தியாலங்கள் மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மின்வெட்டு எப்படி அமுல்படுத்தப்படும் என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என மின்சார சபை தெரிவித்துள்ளது.

முன்னதாக இன்றும் நாளையும் (ஆக. 16) 1 மணி நேரம் 20 நிமிடம் மட்டுமே மின்வெட்டு இருக்கும்.

இதற்கிடையில், மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர டுவிட்டரில், ஏற்பட்ட கோளாறை அடையாளம் காண தொழில்நுட்ப ஊழியர்கள் தற்போது பணியாற்றி வருவதாக தெரிவித்துள்ளார்.

அனல்மின் நிலையத்தின் இரண்டாவது அலகின் திட்டமிடப்பட்ட பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அனல்மின் நிலையத்தின் மூன்றாவது அலகு தொடர்ந்து இயங்கி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மின்சார விநியோகத்தை நிர்வகிப்பதற்காக மேற்கு கடற்கரை மற்றும் பிற எரிபொருள் ஆலைகள் பயன்படுத்தப்படுவதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

க.பொ.த.சாதாரண தரப் பரீட்சை மேலதிக வகுப்புகளுக்கு தடை

2025ம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 17ம் திகதி...

டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தால் 1.9 பில்லியன் ரூபா ஒதுக்கீடு!

டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு ஜனாதிபதி...

எம்.பிக்களுக்கான ஓய்வூதியங்களை நீக்கும் சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணாக அமையவில்லை: உயர்நீதிமன்றம் அறிவிப்பு!

அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரைக்கு இணங்க, பாராளுமன்ற ஓய்வூதியங்கள் (நீக்குதல்)  எனும்...

விவாகரத்து மற்றும் முஸ்லிம் திருமணச் சட்டம் தொடர்பான இரண்டு தனிநபர் மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு!

இலங்கையின் தனிநபர் சட்டங்களை நவீனமயமாக்கும் நோக்கில், ஜனாதிபதி சட்டத்தரணியும் நாடாளுமன்ற உறுப்பினருமான...