நாளை முதல் மின்வெட்டு நேரம் அதிகரிக்கும்!

Date:

நாளாந்த மின்வெட்டு இன்று (ஆகஸ்ட் 15) முதல் நீடிக்கப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் முதலாவது அலகில் 2 மின் உற்பத்தி இயந்திரங்கள் செயலிழந்ததன் காரணமாக மின்வெட்டு நீடிக்கப்பட்டுள்ளதாக சபை குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய இன்று (திங்கட்கிழமை) முதல் 3 மணித்தியாலங்கள் மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மின்வெட்டு எப்படி அமுல்படுத்தப்படும் என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என மின்சார சபை தெரிவித்துள்ளது.

முன்னதாக இன்றும் நாளையும் (ஆக. 16) 1 மணி நேரம் 20 நிமிடம் மட்டுமே மின்வெட்டு இருக்கும்.

இதற்கிடையில், மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர டுவிட்டரில், ஏற்பட்ட கோளாறை அடையாளம் காண தொழில்நுட்ப ஊழியர்கள் தற்போது பணியாற்றி வருவதாக தெரிவித்துள்ளார்.

அனல்மின் நிலையத்தின் இரண்டாவது அலகின் திட்டமிடப்பட்ட பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அனல்மின் நிலையத்தின் மூன்றாவது அலகு தொடர்ந்து இயங்கி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மின்சார விநியோகத்தை நிர்வகிப்பதற்காக மேற்கு கடற்கரை மற்றும் பிற எரிபொருள் ஆலைகள் பயன்படுத்தப்படுவதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

இலங்கையில் புற்றுநோய்க்கு எதிரான மருந்தைக் கண்டுபிடிப்பதில் வெற்றி!

மனித உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும்  புற்றுநோய்க்கு உலகளவில் வைத்தியதுறை மருந்து கண்டுபிடிப்பதில்...

கொழும்பு – கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு விமான சேவை ஆரம்பம்

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல்...

கட்டுரை: ஸகாத் எனும் பொருளாதாரப் பொறிமுறை இலங்கையில் வறுமையைப் போக்கத் தவறியது ஏன்? – NMM மிப்லி

என்.எம்.எம்.மிப்லி ஓய்வுபெற்ற பிரதி ஆணையாளர் நாயகம் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் mifly@mifatax.lk ஸகாத் என்பது வெறுமனே ஒரு...

இன்று உலக மது ஒழிப்பு தினம்!

மது அருந்துவதால் உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 3 மில்லியன் மக்கள்...