பெருந்தோட்ட மக்களுக்கான இணையவழி மருத்துவ சேவை!

Date:

பெருந்தோட்ட மக்களுக்கான இணையவழி மருத்துவ சிகிச்சை மற்றும் ஆலோசனை சேவை செப்டெம்பர் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

பத்தரமுல்லையிலுள்ள நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சில்   தோட்ட வீடமைப்புப் பிரிவின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே  அமைச்சர்   மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் உள்ள புதிய கிராம அபிவிருத்தி அதிகார சபையானது பதுளை மற்றும் இஹல்கஸ்ஹின்னவை மையப்படுத்தி இந்த சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்த மருத்துவ சிகிச்சை சேவை திட்டத்திற்கு O – DOC என பெயரிடப்பட்டுள்ளது, மேலும் ஒரு குடும்பத்திற்கு மாதம் 100 ரூபாய் இதற்கு செலவாகும்.

அனைத்து குடும்ப உறுப்பினர்களுக்கும் மருத்துவ மற்றும் ஆலோசனை சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும், 150க்கும் மேற்பட்ட வைத்தியர்களின் சேவைகள் 24 மணிநேரமும் கிடைக்கப்பெறுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

‘தொழில்நுட்ப ஜாம்பவான்கள் குறைக்கட்டும்’: சமூக வலைதளத் தடையை எதிர்க்கும் எலான் மஸ்க்கிற்கு ஸ்பெயின் பிரதமர் பதிலடி.

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கும் ஸ்பெயின்...

வரலாற்றில் முதன்முறையாக புதிய பெண் பஸ் நடத்துனர்களுக்கு நியமனம்

இலங்கை போக்குவரத்து சபைக்கு புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்ட 20 பஸ் நடத்துனர்களுக்கான நியமனங்களை...

எங்களுக்குத் தேவையற்ற கூடுதல் பாலின அடையாளங்கள் தேவையில்லை. ஹங்கேரி பிரதமர்.

பாலின அடையாளம் மற்றும் பாரம்பரிய குடும்ப விழுமியங்கள் குறித்த விவாதத்தில், ஹங்கேரி...

பல மாவட்டங்களுக்கு கடும் மின்னல் எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் கடும் மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என இயற்கை...