‘மருந்து தட்டுப்பாடும் உடனடியாக தீர்க்கப்படும்’: ஜனாதிபதி

Date:

வைத்தியசாலைகளில் தற்போது பற்றாக்குறையாக காணப்படும் மருந்துப் பொருட்கள் உடனடியாக விநியோகிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு வந்த ஜனாதிபதி, விபத்துக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மூத்த நடிகர் ஜாக்சன் அந்தோனியின் நலம் விசாரித்தார்.

அதன்பின்னர், தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் டபிள்யூ.கே.விக்கிரமாதித்தனை சந்தித்து வைத்தியசாலையில் உள்ள குறைபாடுகள் குறித்து கேட்டறிந்தார்.

பற்றாக்குறையான மருந்துகளை விரைவாக பெற்றுக் கொடுப்பது தனது முக்கிய இலக்குகளில் ஒன்றாக இருப்பதாகவும், அதற்கான நடவடிக்கைகளை தாம் ஏற்கனவே முன்னெடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மேலும், நோயாளிகளின் வாழ்வில் தமக்கு பெரும் பொறுப்பு இருப்பதாகவும், மருந்துப் பற்றாக்குறையை மிக விரைவில் தீர்த்து, மக்களுக்கு இலவச மருத்துவ சேவையை அனுபவிக்க வாய்ப்பளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜாக்சன் அந்தோணியின் நலம் விசாரித்துவிட்டு வைத்தியசாலையிலிருந்து வெளியே வந்த ஜனாதிபதி, சிகிச்சைக்காக வந்திருந்த நோயாளர்களிடமும் நலம் விசாரித்தார்.

Popular

More like this
Related

இலங்கையின் சுகாதாரப் பணிகளை வலுப்படுத்த 175,000 டொலர்களை விடுவித்த உலக சுகாதார ஸ்தாபனம்

இலங்கையின் 25 மாவட்டங்களிலும் கடுமையான வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு...

அனர்த்தம் காரணமாக மூடப்பட்டிருந்த பிரதான வீதிகள் திறப்பு!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை மற்றும் அனர்த்த நிலைமை காரணமாகப் போக்குவரத்திற்குத்...

ஜனாதிபதி தலைமையில் அவசர அமைச்சரவைக் கூட்டம்.

நாட்டின் தற்போதைய சூழ்நிலை தொடர்பில் ஆராயும் விசேட அமைச்சரவைக் கூட்டம் ஒன்று...

தொற்றுநோய் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், வரும் நாட்களில் தொற்று நோய்கள்...