முச்சக்கர வண்டி கட்டணத்தை அதிகரிக்க தீர்மானம்!

Date:

முச்சக்கர வண்டி கட்டணத்தை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்க அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் ஒன்றியம் தீர்மானித்துள்ளது.

முச்சக்கர வண்டி கட்டணங்கள் கட்டுப்படுத்த முடியாத வகையில் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அதன்  தலைவர் லலித் தர்மசேகர,இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இன்று முதல், முச்சக்கர வண்டியில் முதல் மற்றும் இரண்டாவது கிலோமீட்டருக்கான கட்டணம் ரூ. 120 மற்றும் ரூ.100.

தற்போது ‘மொபைல் ஆப்’ மூலம் இயக்கும் முச்சக்கர வண்டி ஓட்டுனர்கள் மற்றும் ஆப்ஸ் அல்லது மீட்டர்கள் மூலம் இயக்காதவர்கள் முதல் கி.மீ. ரூ. 250  முதல் கி.மீ.ஆகும்

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக முச்சக்கர வண்டி கட்டணம் திருத்தியமைக்கப்பட்டு முதல் கிலோ மீட்டருக்கு ரூ. 100 மற்றும் இரண்டாவது கி.மீ ரூ. 90. ஆக இருந்தது.

எனவே, வாகனத்தில் ஏறும் முன் கட்டணம் குறித்து விசாரிக்குமாறு தர்மசேகர மக்களிடம் கேட்டுக்கொண்டார்.

Popular

More like this
Related

நான்காவது அறிவுக் களஞ்சியம் இறுதிப் போட்டி கொழும்பில்..!

தேசிய மட்டத்திலான நான்காவது அறிவுக் களஞ்சிய நிகழ்ச்சியின் இறுதிப்போட்டியானது நாளை 23...

ரணில் விக்ரமசிங்கவுக்கு பிணை வழங்கியது நீதிமன்றம்!

குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில்...

பயங்கரவாதத் தடைச் சட்டம் செப்டெம்பரில் இரத்து செய்யப்படும்: பாராளுமன்றில் அமைச்சர் விஜித

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை (PTA) செப்டெம்பர் முற்பகுதிக்குள் நீக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக,...