யூரியா உர விநியோகத்தின் முழுமையான தணிக்கை தேவை: விவசாய அமைச்சர்

Date:

விவசாயிகளுக்கு யூரியா உரம் விநியோகம் செய்வது தொடர்பில்  முழுமையான தணிக்கையை  மேற்கொள்ளுமாறு அமைச்சின் செயலாளருக்கு விவசாய  அமைச்சர் மஹிந்த அமரவீர,பணிப்புரை விடுத்துள்ளார்.

விவசாயிகளுக்கு யூரியா உரம் விநியோகம் செய்வதில், குளறுபடிகள் மற்றும் குறைபாடுகள் இருப்பின், அடுத்த மாத பருவத்தில் உரம் விநியோகிக்கும் பணியில், அவற்றை சரி செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், முறைகேடுகள் இடம்பெற்றிருந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் பொறுப்பான நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதே இதன் நோக்கமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உர விநியோகம் நிறைவடைந்தவுடன் இந்த முழுமையான கணக்காய்வு நடவடிக்கை உடனடியாக ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, யால பருவத்துக்கான யூரியா உர விநியோகம் 98 வீதத்தால் நிறைவடைந்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

யூரியா உர விநியோகத்தில் சுமார் 2 வீதமான பணிகள் இன்னும் எஞ்சியுள்ளதாகவும், இந்த வாரத்திற்குள் பணிகள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

இலங்கையின் சுகாதாரப் பணிகளை வலுப்படுத்த 175,000 டொலர்களை விடுவித்த உலக சுகாதார ஸ்தாபனம்

இலங்கையின் 25 மாவட்டங்களிலும் கடுமையான வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு...

அனர்த்தம் காரணமாக மூடப்பட்டிருந்த பிரதான வீதிகள் திறப்பு!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை மற்றும் அனர்த்த நிலைமை காரணமாகப் போக்குவரத்திற்குத்...

ஜனாதிபதி தலைமையில் அவசர அமைச்சரவைக் கூட்டம்.

நாட்டின் தற்போதைய சூழ்நிலை தொடர்பில் ஆராயும் விசேட அமைச்சரவைக் கூட்டம் ஒன்று...

தொற்றுநோய் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், வரும் நாட்களில் தொற்று நோய்கள்...