ரஞ்சன் விடுதலைக்கான ஆவணங்களில் கையொப்பமிட்டார்!

Date:

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அனுமதியுடன், சிறைவைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலைக்கான ஆவணங்களில் தாம் கையொப்பமிட்டதாக ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க உறுதிப்படுத்தியுள்ளார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க  (26) அல்லது திங்கட்கிழமை (29) விடுதலை செய்யப்படுவார் என சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ ஏற்கனவே தெரிவித்துள்ளார்.

ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலைக்காக அயராது உழைத்த நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவுக்கு ஹரின் பெர்னாண்டோ நன்றியும் தெரிவித்திருந்தார்.

ஆகஸ்ட் 2017 இல் நீதித்துறையைப் பற்றி அவமதிக்கும் கருத்துக்கள் தொடர்பாக, நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டின் பேரில், நடிகராக மாறிய அரசியல்வாதிக்கு உச்ச நீதிமன்றத்தால் ஜனவரி 12, 2021 அன்று நான்கு ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய, ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் திரு ராமநாயக்கவை மன்னித்து விடுதலை செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ அண்மையில் தெரிவித்திருந்தார்.

Popular

More like this
Related

எகிப்தில் காசா போர் நிறுத்த மாநாட்டுக்கு செல்லும் வழியில் 3 கத்தார் தூதர்கள் விபத்தில் சிக்கி பலி

எகிப்தின் கடற்கரை நகரமான சர்ம் எல்-ஷேக்கிற்கு அருகில் நடந்த கார் விபத்தில்...

சீனாவின் பெய்ஜிங் நகரை சென்றடைந்தார் பிரதமர் ஹரிணி!

2025ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகத் தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக...

இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் 695.7 மில்லியன் டொலர் வரவு!

இந்த ஆண்டு செப்டம்பரில் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டிற்கு மொத்தம் 695.7...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப.1.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (13) நாட்டின் மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மாகாணங்களிலும் மன்னார்...