அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் கஹட்டோவிட்ட கிளைக்கான புதிய நிர்வாக உறுப்பினர்கள்

Date:

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் கம்பஹா மாவட்டம் கஹட்டோவிட்ட கிளையின் வருடாந்த பொதுக்கூட்டமும் கிளைக்கான புதிய நிர்வாக உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்கான கூட்டமும் இன்று கஹட்டோவிட்ட கல்விக்கும் அபிவிருத்திக்குமான இமாம் ஷாபி நிலைய பிரதான மண்டபத்தில் இன்று காலை 10 மணியளவில் நடைபெற்றது.

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைமையகத்தில் இருந்து வந்த கண்காணிப்பு குழுவின் பிரசன்னத்துடன் நடைபெற்ற இக்கூட்டத்தில் நடப்பு வருடத்திற்கான புதிய நிர்வாகிகள் தெரிவு செய்யப்பட்டார்கள்.

அதற்கமைய அஷ்ஷெய்க் அக்ரம் அப்துல் ஸமத் அவர்களும் உப தலைவர்களாக அஷ்ஷெய்க் ஸாஹுல் ஹமீத் (ஜிப்ரி), அஷ்ஷெய்க் ரம்ஸி அலி (நளீமி) அவர்களும் , செயலாளராக அஷ்ஷெய்க் இர்ஹாம் (ரஹ்மானி) உப செயலாளராக அஷ்ஷெய்க் அபூபக்ர் (மக்கி) பொருளாளராக அஷ்ஷெய்க் ஸஹ்ரான் அவர்களோடு சேர்த்து ஒரு செயற்குழுவும் தெரிவு செய்யப்பட்டது.

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவினுடைய நிர்வாக ஒழுங்கின் பிரகாரம் நாடளாவிய ரீதியில் கிளைகளுக்கான தெரிவு தற்போது நடைபெறுகின்றது.

அந்தவகையில் மேற்படி நிர்வாகத்தெரிவு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Popular

More like this
Related

ஊடக சுதந்திரத்துக்கு நேரடி தாக்குதல்; காசா  ஊடகவியலாளர்களின் படுகொலையை ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் வன்மையாகக் கண்டிக்கிறது

அல் ஜஸீரா வலையமைப்புக்காக காசா விலிருந்து கடமையாற்றி வந்த சிரேஷ்ட செய்தியாளர்...

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகலில் மழை

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி...

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...