அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் கஹட்டோவிட்ட கிளைக்கான புதிய நிர்வாக உறுப்பினர்கள்

Date:

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் கம்பஹா மாவட்டம் கஹட்டோவிட்ட கிளையின் வருடாந்த பொதுக்கூட்டமும் கிளைக்கான புதிய நிர்வாக உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்கான கூட்டமும் இன்று கஹட்டோவிட்ட கல்விக்கும் அபிவிருத்திக்குமான இமாம் ஷாபி நிலைய பிரதான மண்டபத்தில் இன்று காலை 10 மணியளவில் நடைபெற்றது.

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைமையகத்தில் இருந்து வந்த கண்காணிப்பு குழுவின் பிரசன்னத்துடன் நடைபெற்ற இக்கூட்டத்தில் நடப்பு வருடத்திற்கான புதிய நிர்வாகிகள் தெரிவு செய்யப்பட்டார்கள்.

அதற்கமைய அஷ்ஷெய்க் அக்ரம் அப்துல் ஸமத் அவர்களும் உப தலைவர்களாக அஷ்ஷெய்க் ஸாஹுல் ஹமீத் (ஜிப்ரி), அஷ்ஷெய்க் ரம்ஸி அலி (நளீமி) அவர்களும் , செயலாளராக அஷ்ஷெய்க் இர்ஹாம் (ரஹ்மானி) உப செயலாளராக அஷ்ஷெய்க் அபூபக்ர் (மக்கி) பொருளாளராக அஷ்ஷெய்க் ஸஹ்ரான் அவர்களோடு சேர்த்து ஒரு செயற்குழுவும் தெரிவு செய்யப்பட்டது.

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவினுடைய நிர்வாக ஒழுங்கின் பிரகாரம் நாடளாவிய ரீதியில் கிளைகளுக்கான தெரிவு தற்போது நடைபெறுகின்றது.

அந்தவகையில் மேற்படி நிர்வாகத்தெரிவு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Popular

More like this
Related

MPL-2026 சாம்பியனாக வெஸ்டர்ன் வொரியர்ஸ் அணி தெரிவு

ஈதுல் பித்ர் நோன்பு பெருநாளை முன்னிட்டு தெல்தோட்டை, மெதகெகில ஸ்ரேன்ஜர்ஸ் விளையாட்டு...

கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை விரைவாக அழிப்பது தொடர்பில் கலந்துரையாடல்

கைப்பற்றப்பட்ட போதைப்பொருளை விரைவாக அழிக்கும் பணிகளில் ஏற்பட்டுள்ள சட்டச் சிக்கல்களை நீக்குவதற்குத்...

ஊடக அதிகாரத்தின் கீழ் மறைக்கப்படும் எமது கதைகள்!

-பொறியியலாளர் மொஹமட் ரிஃபாய் உண்மை என்பது ஒரு ஆயுதம், அதனால்தான் அதைச் சிதைக்க...

அஸ்வெசும மார்ச் மாத கொடுப்பனவு நாளை வைப்பிலிடப்படும்

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கான மார்ச் மாத...