அதானி நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட திட்டங்களினால் நாட்டுக்கு பாதிப்பு ஏற்படும்: மின்சார சபை கூட்டு தொழிற்சங்கம்

Date:

மன்னார் மற்றும் பொன்னேரியில் பகுதிகளில் இரண்டு காற்றாலை மின் திட்டங்களை நிறுவுவதற்கு அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்திற்கு அனுமதி வழங்குவது நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என இலங்கை மின்சார சபை கூட்டு தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அதேநேரம்,இரண்டு காற்றாலை மின் திட்டங்களை நிறுவ அனுமதிப்பதன் மூலம் நாட்டின் பல துறைகள் பாதிக்கப்படும் என அதன் அழைப்பாளர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்துள்ளார்.

அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்திற்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் முதலீடு செய்வதற்கு தற்காலிக அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சனா விஜேசேகர டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இலங்கை மின்சார சபையின் கூட்டு தொழிற்சங்க கூட்டமைப்பின் அழைப்பாளர் ரஞ்சன் ஜயலால், இது தொடர்பான இரண்டு திட்டங்களை நிறுவனத்திற்கு வழங்குவதில் தமக்கு உடன்பாடில்லை என தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...