அதானி நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட திட்டங்களினால் நாட்டுக்கு பாதிப்பு ஏற்படும்: மின்சார சபை கூட்டு தொழிற்சங்கம்

Date:

மன்னார் மற்றும் பொன்னேரியில் பகுதிகளில் இரண்டு காற்றாலை மின் திட்டங்களை நிறுவுவதற்கு அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்திற்கு அனுமதி வழங்குவது நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என இலங்கை மின்சார சபை கூட்டு தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அதேநேரம்,இரண்டு காற்றாலை மின் திட்டங்களை நிறுவ அனுமதிப்பதன் மூலம் நாட்டின் பல துறைகள் பாதிக்கப்படும் என அதன் அழைப்பாளர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்துள்ளார்.

அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்திற்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் முதலீடு செய்வதற்கு தற்காலிக அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சனா விஜேசேகர டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இலங்கை மின்சார சபையின் கூட்டு தொழிற்சங்க கூட்டமைப்பின் அழைப்பாளர் ரஞ்சன் ஜயலால், இது தொடர்பான இரண்டு திட்டங்களை நிறுவனத்திற்கு வழங்குவதில் தமக்கு உடன்பாடில்லை என தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

டிரம்பின் அமைதி திட்டத்தின்படி போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றது ஹமாஸ்!

ஏறத்தாழ கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வரும் இஸ்ரேல்-ஹமாஸ் போர் தற்போது...

போதைப்பொருள் தொடர்பான தகவல்களை வழங்க புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்!

நாட்டின் பல பகுதிகளிலும் ஹெரோயின், ஐஸ், கொக்கேயின் மற்றும் கஞ்சா உள்ளிட்ட...

இலங்கையில் அவசர எரிசக்தி துறை சீர்திருத்தங்களை வலியுறுத்தும் உலக வங்கி!

பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளை விட இலங்கை தொடர்ந்து கணிசமாக அதிக...

சிறுவர்களை ஆபாச செயற்பாடுகளுக்குள் தள்ளும் டிக்டொக் : ஆய்வில் தகவல் !

டிக்டொக் (TikTok) செயலியானது அதன் பரிந்துரைக்கப்பட்ட தேடல் சொற்கள் மூலம் இளம்...