ஆறு மாதங்களுக்கு நாட்டை வழிநடத்த ஜனாதிபதிக்கு அனுமதி வழங்குவோம்: வஜிர கோரிக்கை

Date:

ஒரு வருடமாக காணப்படாத எரிவாயுவும்,  இரசாயன உரங்களும் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் தென்பட ஆரம்பித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

அதேநேரம், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆறு மாதங்களுக்கு நாட்டை வழிநடத்த அனுமதிக்க வேண்டும்.

இந்த தருணத்தில் தொழிற்சங்க சபைக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டால் அது டீசல், பெற்றோல் இழப்புக்கு வழிவகுக்கும் எனவும் இளைஞர்களின் எதிர்காலம் அழிந்துவிடும் எனவும் அபேவர்தன தெரிவித்தார்.

தொழிற்சங்கங்களுக்கும் உரிமைகள் உள்ளன என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் எனவும், ஆனால் தற்போது வீழ்ந்து வங்குரோத்து நாடாக நாம் காணப்படுகின்றோம் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்ற வேளையில் ரணிலுக்கு கொஞ்சம் இடம் கொடுத்தால் பெற்றோல், எண்ணெய், பெற்றோலிய பிரச்சனைகள் தீர்ந்து நாடு வழமைக்கு திரும்பும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

சஜின் வாஸ் குணவர்தன மார்ச் 24 வரை விளக்கமறியலில்!

நிதிக்குற்ற விசாரணை பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்...

ரியாத், துபாய்க்கான தினசரி விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத்...

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் காரணமாக உலகளாவிய ரீதியாக பணவீக்கம் ஏற்படும்: சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்சூழல் காரணமாக எரிபொருள் பாதுகாப்பு உயர்மட்ட பேசுபொருளாக...

சஜின் வாஸ் குணவர்தன கைது!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன இன்று (9) இலஞ்ச...