ஆறு மாதங்களுக்கு நாட்டை வழிநடத்த ஜனாதிபதிக்கு அனுமதி வழங்குவோம்: வஜிர கோரிக்கை

Date:

ஒரு வருடமாக காணப்படாத எரிவாயுவும்,  இரசாயன உரங்களும் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் தென்பட ஆரம்பித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

அதேநேரம், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆறு மாதங்களுக்கு நாட்டை வழிநடத்த அனுமதிக்க வேண்டும்.

இந்த தருணத்தில் தொழிற்சங்க சபைக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டால் அது டீசல், பெற்றோல் இழப்புக்கு வழிவகுக்கும் எனவும் இளைஞர்களின் எதிர்காலம் அழிந்துவிடும் எனவும் அபேவர்தன தெரிவித்தார்.

தொழிற்சங்கங்களுக்கும் உரிமைகள் உள்ளன என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் எனவும், ஆனால் தற்போது வீழ்ந்து வங்குரோத்து நாடாக நாம் காணப்படுகின்றோம் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்ற வேளையில் ரணிலுக்கு கொஞ்சம் இடம் கொடுத்தால் பெற்றோல், எண்ணெய், பெற்றோலிய பிரச்சனைகள் தீர்ந்து நாடு வழமைக்கு திரும்பும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

SLMC யின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக...

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை குறைவடையும் வாய்ப்பு!

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை நாளையிலிருந்து (15) குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக,...

சத்தியாகிரக போராட்டத்தை கைவிட்ட விமல்!

புதிய கல்விச் சீர்திருத்தங்களை அடுத்த வருடம் வரை ஒத்திவைப்பதாக அரசாங்கம் அறிவித்ததைத்...