ஆறு மாதங்களுக்கு நாட்டை வழிநடத்த ஜனாதிபதிக்கு அனுமதி வழங்குவோம்: வஜிர கோரிக்கை

Date:

ஒரு வருடமாக காணப்படாத எரிவாயுவும்,  இரசாயன உரங்களும் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் தென்பட ஆரம்பித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

அதேநேரம், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆறு மாதங்களுக்கு நாட்டை வழிநடத்த அனுமதிக்க வேண்டும்.

இந்த தருணத்தில் தொழிற்சங்க சபைக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டால் அது டீசல், பெற்றோல் இழப்புக்கு வழிவகுக்கும் எனவும் இளைஞர்களின் எதிர்காலம் அழிந்துவிடும் எனவும் அபேவர்தன தெரிவித்தார்.

தொழிற்சங்கங்களுக்கும் உரிமைகள் உள்ளன என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் எனவும், ஆனால் தற்போது வீழ்ந்து வங்குரோத்து நாடாக நாம் காணப்படுகின்றோம் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்ற வேளையில் ரணிலுக்கு கொஞ்சம் இடம் கொடுத்தால் பெற்றோல், எண்ணெய், பெற்றோலிய பிரச்சனைகள் தீர்ந்து நாடு வழமைக்கு திரும்பும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

இன்று இரவு மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை

இன்று (06) இரவு 11.00 மணி வரை பலத்த மின்னல் மற்றும்...

இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு யாருக்கு?

இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் இன்று (6) முதல் அறிவிக்கப்பட உள்ள...

8 ஜனாதிபதி மாளிகைகளுக்கு செலவான 8 கோடி ரூபாய் : வெளியான அறிக்கை

ஜனாதிபதி செயலகத்தின் கடந்த 2024 ஆம் ஆண்டுக்கான பராமரிப்பு பற்றிய செலவுகள்...

பேருவளையில் நடைபெற்ற ஸீரா மாநாடு மற்றும் நூல் வெளியீட்டு விழா

ஸீரா மாநாடு மற்றும் நூல் வெளியீட்டு விழா பேருவளை ZIMICH மண்டபத்தில்...