இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) நஷ்டம் அடைவதற்கான முக்கிய காரணங்களை எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நஷ்டம் அடைய பின்வரும் காரணங்களை அமைச்சர் வெளிப்படுத்தினார்.
1. பல ஆண்டுகளாக மானிய விலையில் பொருட்களை விற்பனை செய்தல்.
2. ரூபாய் பெறுமதி சரிவு – மார்ச் மாதத்திற்கு முன் செய்யப்பட்ட கொள்முதல் 90 முதல் 180 நாட்களுக்கு 203 ரூபா வீதம். தற்போது அதனை திருப்பிச் செலுத்தும் தொகை ரூ.367 முதல் 390 ரூபாவாக மாறி உள்ளது.
3. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை – 300 மில்லியன் அமெரிக்க டாலர், இலங்கை மின்சார சபை செலுத்த வேண்டியது 60 பில்லியன் ரூபா.
4. நிதி நிலைமை காரணமாக அதிக பிரீமியங்கள், மற்றும் வங்கி வட்டி வீதம்.
5. CPC யில் அதிக பணியாளர்கள், திறமையற்றவர்கள் மற்றும் அதிக ஊதியம்
6. 2012 முதல் கூட்டு ஒப்பந்தத்தில் 25% சம்பள உயர்வு
7. சுத்திகரிப்பு நிலையத்தை இயக்காதது மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட பொருட்களை அதிகம் சார்ந்துள்ள காரணம்.
8. அதிக விநியோக செலவுகள் காணப்படுதல் போன்றவையே இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தை நட்டத்தில் இயங்க வைத்துள்ளது என அவர் தெரிவித்தார்.