இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நஷ்டம் அடைவதற்கான முக்கிய காரணங்கள்: காஞ்சன விஜேசேகர!

Date:

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) நஷ்டம் அடைவதற்கான முக்கிய காரணங்களை எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நஷ்டம் அடைய பின்வரும் காரணங்களை அமைச்சர் வெளிப்படுத்தினார்.

1. பல ஆண்டுகளாக மானிய விலையில் பொருட்களை விற்பனை செய்தல்.

2. ரூபாய் பெறுமதி சரிவு – மார்ச் மாதத்திற்கு முன் செய்யப்பட்ட கொள்முதல் 90 முதல் 180 நாட்களுக்கு 203 ரூபா வீதம். தற்போது அதனை திருப்பிச் செலுத்தும் தொகை ரூ.367 முதல் 390 ரூபாவாக மாறி உள்ளது.

3. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை – 300 மில்லியன் அமெரிக்க டாலர், இலங்கை மின்சார சபை செலுத்த வேண்டியது 60 பில்லியன் ரூபா.

4. நிதி நிலைமை காரணமாக அதிக பிரீமியங்கள், மற்றும் வங்கி வட்டி வீதம்.

5. CPC யில் அதிக பணியாளர்கள், திறமையற்றவர்கள் மற்றும் அதிக ஊதியம்

6. 2012 முதல் கூட்டு ஒப்பந்தத்தில் 25% சம்பள உயர்வு

7. சுத்திகரிப்பு நிலையத்தை இயக்காதது மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட பொருட்களை அதிகம் சார்ந்துள்ள காரணம்.

8. அதிக விநியோக செலவுகள் காணப்படுதல் போன்றவையே இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தை நட்டத்தில் இயங்க வைத்துள்ளது என அவர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...