இஸ்லாமிய புதுவருடத்தில் ஆஷூரா தினம்!

Date:

முஸ்லிம்கள் கலண்டரின் படி பிறந்திருக்கின்ற 1444 வது வருடத்தின் முதல் மாதமாகியா முஹர்ரம் மாதத்தில் முஸ்லிம்கள் மிக முக்கியமாக கருதப்படுகின்ற ஆஷூரா தினம் நாளை திங்கள் கிழமையும் அதனை அடுத்து வருகின்ற தினமும் அனுஷ்டிக்கப்படுகின்றது.

இத்தினங்களில் நோன்பு நோற்று தங்களுடைய பாவங்களுக்கு பரிகாரங்களை தேடிக்கொள்வதும், அல்லாஹ்வுடைய அருளைப் பெற்றுக் கொள்வதும் முஸ்லிம்களுடைய மிக முக்கியமான வணக்கமாக இருக்கின்றது.

ஆஷுரா தினம் என்பது முஹர்ரம் மாதத்தின் பத்தாம் நாளை குறிக்கும் வார்த்தையாகும். அரபுமொழியில் அஷரா எனும் பத்தைக் குறிக்கும்.

இஸ்லாத்தின் தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தானும் நோன்பு நோற்று தன் தோழர்களையும் நோற்கும் படி ஏவினார்கள். இதன் அடிப்படையில் ரமலானுக்கு அடுத்தபடியாக உள்ள ஒரு முக்கியமான நோன்பாகவும் இது கருதப்படுகின்றது.

இதனடிப்படையிலேயே ஆஷுரா தினத்தன்று முஸ்லிம்கள் நோன்பு நோற்று வருகின்றார்கள். இது இஸ்லாத்தில் கட்டாய கடமையல்ல. இதுவொரு சுன்னத்தாக (நபி நாயகத்தின் வழிமுறை) கொள்ளப்படுகின்றது.

Popular

More like this
Related

தாஜுதீனின் கொலை குறித்து புதிய கோணத்தில் விசாரணை

றக்பி வீரரான வசீம் தஜுதீனின் மரணம் தொடர்பில் புதிய விசாரணைகள்  ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக...

15 – 29 வயதுக்குட்பட்டவர்களிடையே HIVதொற்று அதிகரிக்கும் அபாயம்: கொழும்பு, கம்பஹா மாவட்டங்களிலேயே அதிக நோயாளர்கள் பதிவு.

இலங்கையில் 15 – 29 வயதுக்குட்பட்டவர்களிடையே எச்.ஐ.வி தொற்று அதிகரிக்கும் அபாயம்...

பெரும்பாலான பகுதிகளில் மழைக்கான சாத்தியம்!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது...

இன்று இரவு மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை

இன்று (06) இரவு 11.00 மணி வரை பலத்த மின்னல் மற்றும்...