உள்நாட்டு விவகாரங்களில் தலையிடும் நாடுகளுக்கு ஜனாதிபதியின் வேண்டுகோள்!

Date:

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் சீன தூதுவர் ‘Qi Zhenhong’ அவர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி டுவிட்டர் செய்தியில் இந்த சந்திப்பு பற்றி குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, ஒரே சீனா கொள்கை மற்றும் நாடுகளின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு தொடர்பான ஐக்கிய நாடுகளின் சாசனத்தின் கோட்பாடுகளுக்கு இலங்கையின் உறுதியான உறுதிப்பாட்டை சீன தூதுவர் முன்னிலையில் மீண்டும் வலியுறுத்தியதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய உலகளாவிய பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் ஆத்திரமூட்டல்களில் இருந்து நாடுகள் விலகிக் கொள்ள வேண்டும் என ஜனாதிபதி தனது டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

பரஸ்பர மரியாதை மற்றும் நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடாமை அமைதியான ஒத்துழைப்பு மற்றும் மோதலின்மைக்கு முக்கியமான அடித்தளங்கள் என்று அவர் மேலும் கூறுகிறார்.

Popular

More like this
Related

மத்திய கிழக்கு மோதல்கள் காரணமாக நான்கு இலங்கையர்கள் காயம்!

மத்திய கிழக்கில் நடந்து வரும் மோதல்கள் காரணமாக மொத்தம் நான்கு இலங்கையர்கள்...

குணமடைந்த 22 ஈரானிய மாலுமிகள் கொக்கல முகாமிற்கு!

தாக்குதலுக்குள்ளான ‘IRIS Dena’ கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, கராபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை...

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...