களுத்துறை மாவட்ட பாடசாலைகளுக்கிடையிலான உதைபந்தாட்ட போட்டிகளில் தொட்டவத்தை அல்- பஹ்ரியா சாதனை

Date:

களுத்துறை மாவட்ட மட்டத்திலான பாடசாலைகளுக்கிடையிலான உதைபந்தாட்ட போட்டிகளில் தொட்டவத்தை அல்- பஹ்ரியா தேசிய பாடசாலை விசேட சாதனை படைத்துள்ளது.

அதற்கமைய, 18 மற்றும் 20 வயதுக்குட்பட்ட பிரிவுகளுக்கு கீழ் நடந்த உதைபந்தாட்ட போட்டிகளில் தொட்டவத்தை அல்-பஹ்ரியா  பாடசாலை அணி இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று மாவட்ட சாம்பியன் பட்டத்தை சூடிக் கொண்டதுடன், மாகாண மட்ட போட்டிகளுக்கும் தெரிவாகியுள்ளது.

மேலும் பாடசாலையின் 16 வயதுக்கு கீழ்ப்பட்ட அணி கால் இறுதி போட்டி வரை முன்னேறியது. இருப்பினும் கடும் போட்டிகளுக்கு மத்தியில் அரை இறுதி வாய்ப்பினை தவறவிட்டது.

இதேவேளை பாடசாலையின் சகல வயதுகளுக்கு கீழ்ப்பட்ட அணிகளுக்கும் வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன், இதற்காக பங்களித்த அதிபர், ஆசிரியர்கள், அணியின் பயிற்றுவிப்பாளர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர்கள் சங்கம், பழைய மாணவிகள் சங்கம், பெற்றோர்கள், நலன்விரும்பிகள் சகலருக்கும் அல்- பஹ்ரியா தேசிய பாடசாலையின் பழைய மாணவர்கள் சங்கம் நன்றிகளை தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

இலங்கையில் WhatsApp மூலம் மோசடி மற்றும் hacking தொடர்பான முறைப்பாடுகள் அதிகரிப்பு!

இலங்கையில் WhatsApp மூலம் மோசடி மற்றும் ஊடுருவல் (hacking) தொடர்பான முறைப்பாடுகள்...

இலங்கையில் புற்றுநோய்க்கு எதிரான மருந்தைக் கண்டுபிடிப்பதில் வெற்றி!

மனித உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும்  புற்றுநோய்க்கு உலகளவில் வைத்தியதுறை மருந்து கண்டுபிடிப்பதில்...

கொழும்பு – கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு விமான சேவை ஆரம்பம்

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல்...

கட்டுரை: ஸகாத் எனும் பொருளாதாரப் பொறிமுறை இலங்கையில் வறுமையைப் போக்கத் தவறியது ஏன்? – NMM மிப்லி

என்.எம்.எம்.மிப்லி ஓய்வுபெற்ற பிரதி ஆணையாளர் நாயகம் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் mifly@mifatax.lk ஸகாத் என்பது வெறுமனே ஒரு...