காலி புகையிரத நிலையத்திற்கு அபாயா ஆடை அணிந்து வந்த இளைஞன் பொலிஸாரால் கைது!

Date:

முஸ்லிம் பெண்கள் அணியும் அபாயா ஆடை மற்றும் பர்தா அணிந்து வந்த முஸ்லிம் இளைஞன் ஒருவரை காலி புகையிரத நிலைய பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்து காலி பொலிஸாரிடம் இன்று (19) காலை ஒப்படைத்துள்ளனர்.

காலி மகுலுவ பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய முஸ்லிம் இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று காலை புகையிரத நிலையத்திற்கு வந்த அவர் கொழும்பு செல்வதற்கான பயணச்சீட்டை வாங்கிச் சென்றதையடுத்து அவரின் குரலில் சந்தேகம் அடைந்த பாதுகாப்பு அதிகாரிகள் அவரை சோதனையிட்டனர்.

அங்கு முஸ்லிம் பெண் உடை அணிந்திருந்தாலும் அவர் ஆணாக இருப்பதை ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் பார்த்தனர்.

இதனையடுத்து, புகையிரத பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அவரை பொலிஸாரிடம் ஒப்படைத்ததுடன் பொலிஸாரின் விசாரணையின் போது தனது காதலிக்கு வேறு ஒரு இளைஞனுடன் தொடர்பு இருப்பதாக கிடைத்த தகவலின் பிரகாரம், பெண் ஆடை அணிந்து வந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த ஆடை அவரது தாயாரின் ஆடை எனவும் தெரியவந்துள்ளதுடன், குறித்த சந்தேகநபரை காலி புகையிரத நிலையத்தின் பாதுகாப்புப் பிரிவின் நிலையத் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.

Popular

More like this
Related

இலங்கையின் சுகாதாரப் பணிகளை வலுப்படுத்த 175,000 டொலர்களை விடுவித்த உலக சுகாதார ஸ்தாபனம்

இலங்கையின் 25 மாவட்டங்களிலும் கடுமையான வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு...

அனர்த்தம் காரணமாக மூடப்பட்டிருந்த பிரதான வீதிகள் திறப்பு!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை மற்றும் அனர்த்த நிலைமை காரணமாகப் போக்குவரத்திற்குத்...

ஜனாதிபதி தலைமையில் அவசர அமைச்சரவைக் கூட்டம்.

நாட்டின் தற்போதைய சூழ்நிலை தொடர்பில் ஆராயும் விசேட அமைச்சரவைக் கூட்டம் ஒன்று...

தொற்றுநோய் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், வரும் நாட்களில் தொற்று நோய்கள்...