காலி புகையிரத நிலையத்திற்கு அபாயா ஆடை அணிந்து வந்த இளைஞன் பொலிஸாரால் கைது!

Date:

முஸ்லிம் பெண்கள் அணியும் அபாயா ஆடை மற்றும் பர்தா அணிந்து வந்த முஸ்லிம் இளைஞன் ஒருவரை காலி புகையிரத நிலைய பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்து காலி பொலிஸாரிடம் இன்று (19) காலை ஒப்படைத்துள்ளனர்.

காலி மகுலுவ பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய முஸ்லிம் இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று காலை புகையிரத நிலையத்திற்கு வந்த அவர் கொழும்பு செல்வதற்கான பயணச்சீட்டை வாங்கிச் சென்றதையடுத்து அவரின் குரலில் சந்தேகம் அடைந்த பாதுகாப்பு அதிகாரிகள் அவரை சோதனையிட்டனர்.

அங்கு முஸ்லிம் பெண் உடை அணிந்திருந்தாலும் அவர் ஆணாக இருப்பதை ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் பார்த்தனர்.

இதனையடுத்து, புகையிரத பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அவரை பொலிஸாரிடம் ஒப்படைத்ததுடன் பொலிஸாரின் விசாரணையின் போது தனது காதலிக்கு வேறு ஒரு இளைஞனுடன் தொடர்பு இருப்பதாக கிடைத்த தகவலின் பிரகாரம், பெண் ஆடை அணிந்து வந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த ஆடை அவரது தாயாரின் ஆடை எனவும் தெரியவந்துள்ளதுடன், குறித்த சந்தேகநபரை காலி புகையிரத நிலையத்தின் பாதுகாப்புப் பிரிவின் நிலையத் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.

Popular

More like this
Related

துருக்கி ஜனாதிபதி அர்தூகான் சவூதி விஜயம்: இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஒரு புதிய மைல்கல்.

செவ்வாய்க்கிழமை (03,) அன்று ரியாத் நகருக்கு துருக்கி ஜனாதிபதி ரசப் தையிப்...

ரியாதிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம்

ரியாத் இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம் சவூதி அரேபியாவின் ரியாத்...

இலங்கையின் முதல் பெண் கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜெயரத்ன பதவியேற்றார்!

புதிய கணக்காய்வாளராக நியமிக்கப்பட்ட சமுதிகா ஜயரத்ன இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றார்....

எப்ஸ்டீன் ஆவணங்கள்: 188 இடங்களில் ‘இலங்கை’ பெயர்.

அமெரிக்க நீதித்துறை வலைத்தளத்தில் புதுப்பிக்கப்பட்ட எப்ஸ்டீன் பதிவுகள் நூலகத்தின் மதிப்பாய்வின்படி, பொதுவில்...