காலி முகத்திடல் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள், சடலங்கள் தொடர்பில் உடனடியாக விசாரிக்குமாறு சட்டத்தரணிகள் சங்கம் வேண்டுகோள்!

Date:

காலி முகத்திடல் போராட்டக்களத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் மற்றும் சடலங்கள் தொடர்பில் முழுமையான விசாரணைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் பொலிஸ் மா அதிபர் விக்கிரமரத்னவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல நபர்களின் மரணத்திற்கு காரணமான துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தொடர்பாக விடயங்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.

காலி முகத்திடலை அண்மித்த பகுதிகளில் சடலங்கள் கரை ஒதுங்குவது தொடர்பில் ஊடகங்களில் வெளியான செய்திகள் தொடர்பிலும் சட்டத்தரணிகள் சங்கம் பொலிஸ் மா அதிபரின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளது.

இந்நிலையில், அதிகாரிகளிடமிருந்து எந்த விளக்கமும் இல்லாத நிலையில், இதுபோன்ற உடல்கள் இருப்பது பொதுமக்களின் ஒரு பிரிவினரிடையே அச்சத்தை ஏற்படுத்தியதை சட்டத்தரணிகள் சங்கம் அவதானித்துள்ளது.

இதேவேளை, சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் பொதுமக்களின் நம்பிக்கை பேணப்படுவதை உறுதி செய்வதற்கும் இலங்கையின் கௌரவத்திற்கு பாதிப்பு ஏற்படாதவாறு உறுதி செய்வதற்கும் இவ்விரு விடயங்களையும் அவசரமாக விசாரணை செய்ய வேண்டியதன் அவசியத்தை இலங்கை சட்டத்தரணிகள் வங்கம் வலியுறுத்தியுள்ளது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...