குளிரூட்டப்பட்ட உணவு பொருட்களின் விலைகள் அதிகரிக்கும்?

Date:

75 சதவீத மின்சாரக் கட்டண உயர்வால் குளிர்சாதன உணவுப் பொருட்களான தயிர், ஐஸ்கிரீம் மற்றும் இறைச்சி போன்ற குளிரூட்டப்பட்ட மற்றும் உறைந்த பொருட்களின் விலை அதிகரிக்கும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் கணித்துள்ளது.

கட்டண உயர்வினால் உணவக உரிமையாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் உணவுப் பொருட்களின் விலையை குறைத்ததை அடுத்து மின்கட்டணம் உயர்த்தப்பட்டது.

அதேபோல வாடிக்கையாளர்களை மீண்டும் உணவகங்களுக்கு ஈர்க்கும் வகையில் வழக்கமான தேநீர் கோப்பை ரூ.30 மற்றும் மதிய உணவுப் பொதிகள் 10 சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

மேலும், குளிர்சாதனப் பொருட்களுக்கான விலைகள் மட்டுமின்றி கடைகளில் மின் கட்டணம் உள்ளிட்ட விலை உயர்வால் தாங்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உற்பத்தி நிறுவனங்கள் பொதுமக்கள் மீது திணிக்கப்படும் விலையை நிர்ணயிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

2026ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 18,000 எலிக்காய்ச்சல் சம்பவங்கள் பதிவு

நாட்டில் கடந்த ஒரு வருட காலப்பகுதியில் மாத்திரம் சுமார் 13,000 எலிக்காய்ச்சல்...

உணவு வகைகளின் விலைகள் அதிகரிப்பு!

நாட்டில் நிலவும் பொருளாதார சூழல் மற்றும் எரிசக்தி விலையேற்றம் காரணமாக, இன்று...

ரமழானில் இறுதி பத்து: பிக்ஹுல் இஃதிகாப்!

-முஹம்மத் பகீஹுத்தீன் இஃதிகாப் என்றால் என்ன? பொது வாழ்வின் சந்தடிகளை விட்டு தூரமாகி, அல்லாஹ்வை...

மத்திய கிழக்கு மோதல்: உலகளாவிய கச்சா எண்ணெய் விலையில் கடும் உயர்வு – EIA வெளியிட்ட அதிரடி அறிக்கை!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழலுக்கு மத்தியில், அமெரிக்க எரிசக்தி தகவல்...