கொழும்பில் வாழ் மக்களின் பேஸ்புக் கணக்குகளை பார்ப்பதே பொலிஸாரின் வாடிக்கையாகிவிட்டது: மனோ

Date:

காலி முகத்திடல் போராட்டத்திற்கு ஆதரவான கொழும்பில் வாழும் மக்களின் முகநூல் கணக்குகளை பார்ப்பது பொலிஸாரின் பிரதான கடமைகளில் ஒன்றாகும் என கொழும்பு மாவட்ட உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற பாராளுமன்ற அமர்விலே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

மேலும், பொலிஸார் கொழும்பில் வாழும் மக்களின் முகநூல் கணக்குகளுக்குள் பிரவேசித்து அதனை பதிவிறக்கம் செய்து,  முடிவடைந்து விட்டதாக நினைத்துக்கொண்டிருக்கும் போராட்டத்தை அடிப்படையாக கொண்டு மக்களின் பின்னால் சென்று அச்சுறுத்துகின்றனர்.

அத்தோடு மக்களைப் பின்தொடர்ந்து கொண்டுபோய் பயமுறுத்துவதுதான் பொலிஸார் பிரதான வேலை, இவ்வாறான செயற்பாடுகளை தாம் முற்றாகக் கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேபோல ஜனாதிபதி மாளிகை ஆக்கிரமிக்கப்பட்ட போது, பொலிஸார் கூட தங்கள் சீருடையில் உடற்பயிற்சி கூடத்தை பயன்படுத்துவதை தான் பார்த்ததாக அவர் கூறினார்.

இவற்றைப் பார்த்த பொதுமக்களும் மிருகக்காட்சிசாலையை பார்ப்பது போல் ஜனாதிபதி மாளிகைக்கு சென்றதாகவும் எனவே பொது மக்களுக்கு இடையூறு செய்ய வேண்டாம் என பொலிஸாரிடம் கோரிக்கை விடுப்பதாகவும் மனோ கணேசன் தெரிவித்தார்.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...