கொவிட் தடுப்பூசியின் 4வது டோஸை வழங்க ‘மொபைல் தடுப்பூசி’ தளங்கள்!

Date:

கொவிட்- 19 தடுப்பூசியின் நான்காவது டோஸை வழங்குவதற்கு ‘மொபைல் தடுப்பூசி’ தளங்கள் அல்லது வாகனங்களைப் பயன்படுத்த சுகாதார அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

இதன்படி, தேவைகளின் அடிப்படையில் குறிப்பிட்ட இடங்களுக்கு வாகனங்கள் அனுப்பி வைக்கப்படும் என அமைச்சு தெரிவித்துள்ளது.

நான்காவது டோஸ் மேலும் பெரிய மருத்துவமனைகள் மற்றும் சுகாதார வசதிகளால் வழங்கப்படுகிறது.

டெங்கு, கொவிட்-19 மற்றும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை பெரும்பாலான குழந்தைகள் டெங்கு நோயினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளரும் லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளருமான டொக்டர் ஜி.விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

தற்போது பரவி வரும் வைரஸ் காய்ச்சல் குறித்து பெரியவர்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

Popular

More like this
Related

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...

பலஸ்தீனத்திற்கான உலக ஒற்றுமை பேரணி கொழும்பில்: ஆசிய நாடுகள் இணையும் மனிதாபிமானப் போராட்டம்!

கொழும்பில் ஆகஸ்ட் 15, 2025 வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு விஹார...

இலங்கை – சவூதி அரேபிய பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக அமைச்சர் குமார ஜயகொடி தெரிவு

பத்தாவது பாராளுமன்றத்தின் இலங்கை – சவூதி அரேபிய பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின்...