கோட்டபாய தொடர்பில் தாய்லாந்திடம் இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கை!

Date:

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாய்லாந்திற்குள் நுழைவதற்கும் தற்காலிகமாக அங்கு தங்குவதற்கும் அனுமதிக்குமாறு, இலங்கை அரசாங்கம் அந்நாட்டு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தாய்லாந்து வெளிவிவகார அமைச்சர் டானி சாங்ராட் தெரிவித்துள்ளார்.

டுவிட்டர் செய்தியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, முன்னாள் ஜனாதிபதி அரசியல் தஞ்சம் கோரவில்லை எனவும் இரு நாடுகளுக்குமிடையிலான நீண்டகால மற்றும் சுமூகமான உறவுகளின் அடிப்படையில் இந்த பரிசீலனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையில் 2013ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம், இராஜதந்திர கடவுச்சீட்டை வைத்திருக்கும் முன்னாள் ஜனாதிபதி, வீசா இன்றி 90 நாட்கள் தாய்லாந்தில் தங்கியிருக்க அனுமதிக்கப்படுவார் என டேனி சோங்ரட் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை: மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்தல்.

நாட்டின் இரண்டு பகுதிகளின் மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்து மண்சரிவு சிவப்பு...

நாட்டில் வேலையின்றி இருக்கும் 365,951 பேர்: பிரதமர் தகவல்!

நாட்டில் தற்சமயம் 365,951 பேர் வேலையின்றி இருப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய...

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...