கோட்டாபய மற்றும் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்:மனித உரிமைகள் ஆணைக்குழு

Date:

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு இலங்கை வருவதற்கு போதிய பாதுகாப்பை வழங்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்துள்ளது.

இன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு அனுப்பிய கடிதத்தில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவுக்கு அவர் கோரும் போதெல்லாம் சட்டப்படி உரிய பாதுகாப்பை வழங்குவதற்காக அச்சுறுத்தல் நிலைமையை மதிப்பிடுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று மனித உரிமை ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

இதேவேளை தற்போது கப்பலில் வெளிநாட்டில் வாழும் கோட்டாபய ராஜபக்ஷவின் குடும்பத்தினர் பாதுகாப்பாக நாடு திரும்புவதற்கு சட்டத்தின் பாதுகாப்பிற்கு உரிமையுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி எதிர்வரும் சில தினங்களில் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.

இதனையடுத்து அவரது மிரிஹான இல்லத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

Popular

More like this
Related

அரசாங்க அச்சுத் திணைக்களத்தில் தமிழ் மொழிபெயர்ப்பாளர் தட்டுப்பாடு: தமிழ், முஸ்லிம் விண்ணப்பதாரர்கள் பாதிப்பு!

அரசாங்க அச்சுத் திணைக்களத்தில் தமிழ் மொழிபெயர்ப்பாளர்களின் பற்றாக்குறை நிலவுவதால், நாளாந்தம் வெளியிடப்படும்...

விசேட தேவையுடையோருக்கு புதிய பஸ்கள் இறக்குமதி

‘கிளீன் ஸ்ரீலங்கா’ (Clean Sri Lanka) திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியைப்...

இந்தியா – பாகிஸ்தான் போட்டி: இலங்கையில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம்

கொழும்பில் எதிர்வரும் 15 ஆம் திகதி நடைபெறவுள்ள இந்தியா – பாகிஸ்தான்...

ஊழலில் வீழ்ச்சி கண்டு வரும் இலங்கை

Transparency International ஊடாக வெளியிடப்பட்டுள்ள 2025 ஊழல் குறிகாட்டி பட்டியலில் (CPI) ...