சர்வகட்சி அரசாங்கம்: ஜனாதிபதியுடன் கலந்துரையாடலில் ஜே.வி.பி பங்கேற்கும்- ஹந்துன்நெத்தி

Date:

சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் நாளை நடைபெறவுள்ள கலந்துரையாடலில் மக்கள் விடுதலை முன்னணி பங்கேற்கவுள்ளதாக ஜே.வி.பி அரசியல் சபை உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி இன்று தெரிவித்துள்ளார்.

அதற்கமைய ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் அவர்கள் கலந்துரையாடலில் பங்குபற்றவுள்ளதாக அவர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் ஜே.வி.பியின் நிலைப்பாட்டை ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தவுள்ளதாக தெரிவித்த ஹதுன்நெத்தி, எவ்வாறாயினும், சர்வகட்சி அரசாங்கத்துடன் இணையப்போவதில்லை எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், ‘சர்வ கட்சி அரசாங்கம் பற்றிய எங்களின் நிலைப்பாட்டை நாங்கள் ஏற்கனவே நாட்டுக்கு வெளிப்படுத்தியுள்ளோம்.

அனைத்துக் கட்சி அரசாங்கம், பொதுத் தேர்தலை நடத்தவோ அல்லது எளிதாக்கவோ செய்யும் இடைக்கால அரசாங்கம் அல்ல.

ஜனாதிபதி விக்கிரமசிங்கவின் அதிகாரத்தை நிலைநாட்டவும் சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையைப் பெற்றுக் கொள்வதற்காகவும் இது உருவாக்கப்பட்டது.

ஜனாதிபதி அரசாங்கத்தை உருவாக்கிவிட்டு தற்போது ஏனைய கட்சிகளை அதில் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார். இது அனைத்துக் கட்சி அரசு அல்ல,” என்றார்.

Popular

More like this
Related

டிரம்பின் அமைதி திட்டத்தின்படி போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றது ஹமாஸ்!

ஏறத்தாழ கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வரும் இஸ்ரேல்-ஹமாஸ் போர் தற்போது...

போதைப்பொருள் தொடர்பான தகவல்களை வழங்க புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்!

நாட்டின் பல பகுதிகளிலும் ஹெரோயின், ஐஸ், கொக்கேயின் மற்றும் கஞ்சா உள்ளிட்ட...

இலங்கையில் அவசர எரிசக்தி துறை சீர்திருத்தங்களை வலியுறுத்தும் உலக வங்கி!

பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளை விட இலங்கை தொடர்ந்து கணிசமாக அதிக...

சிறுவர்களை ஆபாச செயற்பாடுகளுக்குள் தள்ளும் டிக்டொக் : ஆய்வில் தகவல் !

டிக்டொக் (TikTok) செயலியானது அதன் பரிந்துரைக்கப்பட்ட தேடல் சொற்கள் மூலம் இளம்...