சவூதி, சீனா உள்ளிட்ட 24 வெளிநாட்டு நிறுவனங்கள் இலங்கை பெற்றோலிய வர்த்தகத்தில் ஈடுபட விருப்பம்!

Date:

இலங்கையில் பெற்றோலிய வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கு 24 நிறுவனங்கள் முன்மொழிவுகளை சமர்ப்பித்துள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா, அமெரிக்கா, சீனா, இந்தியா, ரஷ்யா, ஐக்கிய இராச்சியம், மலேசியா, நோர்வே மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் இவ்வாறான முன்மொழிவுகளை சமர்ப்பித்துள்ளதாக அமைச்சர் தனது டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ள குழு, உரிய முன்மொழிவுகளை மதிப்பீடு செய்து, 6 வாரங்களில் இந்த நடவடிக்கையை நிறைவு செய்யும் என எரிசக்தி அமைச்சர்  டுவிட்டர் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

MPL-2026 சாம்பியனாக வெஸ்டர்ன் வொரியர்ஸ் அணி தெரிவு

ஈதுல் பித்ர் நோன்பு பெருநாளை முன்னிட்டு தெல்தோட்டை, மெதகெகில ஸ்ரேன்ஜர்ஸ் விளையாட்டு...

கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை விரைவாக அழிப்பது தொடர்பில் கலந்துரையாடல்

கைப்பற்றப்பட்ட போதைப்பொருளை விரைவாக அழிக்கும் பணிகளில் ஏற்பட்டுள்ள சட்டச் சிக்கல்களை நீக்குவதற்குத்...

ஊடக அதிகாரத்தின் கீழ் மறைக்கப்படும் எமது கதைகள்!

-பொறியியலாளர் மொஹமட் ரிஃபாய் உண்மை என்பது ஒரு ஆயுதம், அதனால்தான் அதைச் சிதைக்க...

அஸ்வெசும மார்ச் மாத கொடுப்பனவு நாளை வைப்பிலிடப்படும்

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கான மார்ச் மாத...