ஜனாதிபதி மாளிகைக்குள் பிரவேசித்தவர்களின் நடத்தையால் நாட்டிற்கு சர்வதேச அளவில் அவப்பெயர்:கமல் குணரத்ன

Date:

ஜூலை 9 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவங்கள் காரணமாக இலங்கை சர்வதேச சமூகத்தின் முன் பெரும் அவமதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் நாயகம் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

தேசிய பாதுகாப்பு, சட்டம் மற்றும் ஊடக அறிக்கையிடல் தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

குடிமக்கள் சட்டத்தை கையில் எடுப்பது குறித்தும் பாதுகாப்புச் செயலாளர் தனது கருத்தை தெரிவித்தார்.

எந்தவொரு நபரோ அல்லது மக்கள் பிரதிநிதிகளோ சட்டவிரோதமான முறையில் சொத்துக்களை குவித்திருந்தால் அது தொடர்பில் பாதுகாப்பு தரப்பினர் நடவடிக்கை எடுப்பார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...