ஜோசப் ஸ்டாலினை விடுவிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்!

Date:

ஜோசப் ஸ்டாலினை விடுவிக்கக் கோரி அகில இலங்கை ஐக்கிய ஆசிரியர் சங்கம் இன்று லிப்டன் சுற்றுவட்டாரத்தில் பிற்பகல் 2.30 மணி முதல் போராட்டமொன்றை நடத்தவுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஆசிரியர் சங்கம் தலைவர் யல்வெல பஞ்ஞசேகர,

ஆசிரியர் சங்க தலைவரும் செயற்பாட்டாளருமான ஜோசப் ஸ்டாலினை விடுவிக்கக் கோரி பாடசாலை முடிந்தவுடன் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார்.

ஜோசப் ஸ்டாலினை, கடந்த புதன்கிழமை, ஆகஸ்ட் 3ஆம் திகதி, கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்தில் பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று கைது செய்தது.

அவரது கைது நீதிமன்ற உத்தரவை மீறி 2022 மே மாதம் நடந்த போராட்டத்துடன் தொடர்புடையது என்று அதிகாரிகள் கூறியிருந்தனர்.

உடல்நிலை மோசமாக இருந்த போதிலும், அவர் கோட்டை காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு விளக்கமறியலில் ஆகஸ்ட் 12 வரை விளக்கமறியலில் வைக்கப்படுவார்.

ஜோசப் ஸ்டாலினின் கைது இலங்கையில் அரகலய எதிர்ப்பாளர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களுக்கு எதிரான அரசாங்கத்தின் அடக்குமுறையின் வளர்ந்து வரும் வடிவத்தின் ஒரு பகுதியாகும்.

இதில் கைதுகள், மிரட்டல்கள், வன்முறைகள் மற்றும் கண்காணிப்பு ஆகியவை அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

இன்று இரவு மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை

இன்று (06) இரவு 11.00 மணி வரை பலத்த மின்னல் மற்றும்...

இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு யாருக்கு?

இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் இன்று (6) முதல் அறிவிக்கப்பட உள்ள...

8 ஜனாதிபதி மாளிகைகளுக்கு செலவான 8 கோடி ரூபாய் : வெளியான அறிக்கை

ஜனாதிபதி செயலகத்தின் கடந்த 2024 ஆம் ஆண்டுக்கான பராமரிப்பு பற்றிய செலவுகள்...

பேருவளையில் நடைபெற்ற ஸீரா மாநாடு மற்றும் நூல் வெளியீட்டு விழா

ஸீரா மாநாடு மற்றும் நூல் வெளியீட்டு விழா பேருவளை ZIMICH மண்டபத்தில்...