ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உட்பட இரு சந்தேகநபர்களுக்கு பிணை!

Date:

இலஞ்சம் பெற்றதாக குற்றம் சுமத்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உட்பட இரு சந்தேகநபர்களுக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தினால்  பிணை வழங்கப்பட்டுள்ளது.

2013ஆம் ஆண்டு சதொச நிறுவன ஊழியர்கள் தமது உத்தியோகபூர்வ கடமைகளில் இருந்து நீக்கி அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் மூலம் அரசாங்கத்திற்கு பதினொரு இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான நஷ்டத்தை ஏற்படுத்தியதாக தாக்கல் செய்யப்பட்ட உயர் குற்றச்சாட்டுக்கள் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட மூவருக்கு எதிரான குற்றப்பத்திரிகைகள் கடந்த 9ஆம் திகதி (09) கொழும்பு மேல் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.

அந்த வழக்கில், நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட மூன்று பிரதிவாதிகளையும் தலா 50,000 ரூபா ரொக்கப் பிணையிலும், தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் விடுதலை செய்ய உத்தரவிட்ட உயர் நீதிமன்ற நீதிபதி, விசாரணை முடியும் வரை அவர்களது வெளிநாட்டுப் பயணத்தைத் தடை செய்தும் உத்தரவிட்டார்.

Popular

More like this
Related

தேசபந்து தென்னக்கோனுக்கு விளக்கமறியல்

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனுக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி,...

கடமைகளுக்கு வராமல் இருக்கும் தபால் ஊழியர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை.

பணிப்புறக்கணிப்பை தொடர்ந்து கடமைகளுக்கு வராமல் இருக்கும் தபால் ஊழியர்கள் மீது ஒழுக்காற்று...

2026ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் நவம்பரில் பாராளுமன்றத்திற்கு

2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் பாராளுமன்றத்தில்...

அரசாங்கத்தின் சட்டமூலத்துக்கு எதிராக மேலும் மூன்று மனுத்தாக்கல்!

முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை இரத்து செய்வதற்காக அரசாங்கம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த...