தங்காலை ஹேனகடுவ பிரதேசத்தில் மோட்டார் வாகனம் வீதியை விட்டு விலகி ஆலமரத்தில் மோதியதில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக தங்கல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்தில் விரித்தமுல்ல கிராமத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 35 வயதுடைய லலித் சுஜீவ மற்றும் 30 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான சுரேஷ் உதயங்க ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை, விபத்தில் படுகாயமடைந்த ஒருவர் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையிலும் மற்றைய இருவர் தங்காலை ஆதார வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.