தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் மயிலத்தமடு மேய்ச்சற்தரை ஆக்கிரமிப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டம்!

Date:

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர்களுக்குச் சொந்தமான பல இலட்சம் கால்நடைகளின் மேய்ச்சல் தரையான மயிலத்தமடு பகுதி சிங்களவர்களுக்கு வழங்கப்பட்டு தமிழர்களின் வாழ்வாதாரம் அழிக்கப்படுவதைக் கண்டித்து மட்டக்களப்பு செங்கலடி சந்தியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தருமலிங்கம் சுரேஸ் தலைமையில் இடம்பெற்ற இப்போராட்டத்தில் பொதுமக்களுடன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் மற்றும் கட்சியின் செயற்பாட்டாளர்கள், கால்நடை வளர்ப்போர் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

பௌத்த சிங்கள அரச பயங்கரவாதத்தினால் தமிழர் தாயகமான வடக்கு கிழக்கு பகுதிகள் தொடர்ச்சியாக ஆக்கிரமிக்கப்பட்டு பௌத்த விகாரைகளும், சிங்களக் குடியேற்றங்களும் அமைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...