பயங்கரவாதத் தடைச் சட்ட உத்தரவில் ஜனாதிபதி கையொப்பமிட்டால், அது இலங்கைக்கு இருண்ட நாளாக அமையும்: ஐ.நா.அறிக்கையாளர்

Date:

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள வசந்த முதலிகே உள்ளிட்டோரை தடுத்து வைக்கும் உத்தரவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கையொப்பமிட்டால், அது இலங்கைக்கு இருண்ட நாளாக அமையும் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பாதுகாப்பு தொடர்பான விசேட அறிக்கையாளர் மேரி லோலர் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக மேரி லோலர் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டிருந்தார்.

அதில் மனித உரிமைப் பாதுகாவலர்களான வசந்த முதலிகே, ஹஷான் ஜீவந்த மற்றும் கல்வௌ சிறிதம்மா ஹிமி ஆகியோர் இலங்கையின் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதையிட்டு நான் ஆழ்ந்த கவலையடைகிறேன்.

அவர்களை தடுத்து வைக்கும் உத்தரவில் கையெழுத்திட வேண்டாம் என்று ஜனாதிபதி ரணிலுக்கு நான் வேண்டுகோள் விடுக்கிறேன், அவ்வாறு செய்வது ஒரு இருண்ட நாளாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, வசந்த முதலிகே மற்றும் மேலும் இருவரின் விசாரணைகள் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...