புதியு கூட்டமைப்பு உருவாக்கத் திட்டம்: மைத்திரிபால சிறிசேன!

Date:

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையில் இடதுசாரி கட்சிகளை இணைத்துக்கொண்டு கூட்டமைப்பொன்றை கட்டியெழுப்ப எதிர்பார்த்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதியும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அமைக்கப்படும் கூட்டமைப்பு, எதிர்வரும் காலத்தில் ஆட்சி பீடத்தை அமைக்கவுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

மஹரகம பகுதியில் நேற்று (28) இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தொகுதி கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவே தற்போது ஆட்சியை முன்னெடுத்து செல்கின்றமையினால், தனக்கு பிரதமர் பதவி வழங்கப்படும் பட்சத்தில், தான் அதனை பொறுப்பேற்க தயார் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துவோர் அமைச்சு பொறுப்புக்களை ஏற்க தயார் இல்லை எனவும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...