பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க சென்ற 12 இலங்கை விளையாட்டு வீரர்கள் மாயம்: விசாரணைகள் ஆரம்பம்

Date:

பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்காக பிரித்தானியா சென்ற இலங்கை அணியின்  12 பேர் அதிகாரிகளுக்கு அறிவிக்காமல் அணியை விட்டு வெளியேறியுள்ளதாக ஏ.எப்.பி செய்தி வெளியிட்டுள்ளது.

இவர்களில் மூவர் கடந்த வாரம் தப்பிச் சென்றதாகவும், ஏனைய ஏழு பேர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தெரிவிக்காமல் குழுவிலிருந்து வெளியேறியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் குழுவிலிருந்து தப்பியோடியிருக்கலாம் என ஊகிக்கப்படுகிறது.

இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடி காரணமாக இவ்வாறானதொரு நிலை உருவாகியிருக்கலாம் எனவும் ஏ.எப்.பி செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்காக ஏறக்குறைய 160 வீரர்கள் மற்றும் அதிகாரிகள் பிரித்தானியாவிற்கு வந்துள்ளதாக தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

இதேவேளை ஜூடோ, குத்துச்சண்டை, பீச் வாலிபால் மற்றும் மல்யுத்தம் ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அணியின் அதிகாரி உட்பட 12 இலங்கை விளையாட்டு வீரர்கள் காணாமல் போயுள்ளனர்.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும், நான்கு விளையாட்டு வீரர்கள் காணாமல் போனதாக புகார் எழுந்தது மற்றும் வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் பொலிஸார் இது குறித்து விசாரணையை தொடங்கினர்.

Popular

More like this
Related

திரைப்படத் துறையில் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு ஜனாதிபதியினால் தீர்வு

சினிமாவின் முன்னேற்றம் நாட்டு மக்களின் ஆன்மீக வளர்ச்சியில் தாக்கம் செலுத்துகிறது என்றும்,...

பெண்களுக்கு எதிரான டிஜிட்டல் வன்முறையை எதிர்த்துப் போராட ‘அவளுக்கான வாக்குறுதி’ பிரசாரத்தை ஆரம்பித்த Inglish Razor.

2025 நவம்பர் 25: பெண்களுக்கு எதிரான வன்முறையை இல்லாதொழிப்பதற்கான சர்வதேச தினத்தை...

மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை: மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்தல்.

நாட்டின் இரண்டு பகுதிகளின் மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்து மண்சரிவு சிவப்பு...

நாட்டில் வேலையின்றி இருக்கும் 365,951 பேர்: பிரதமர் தகவல்!

நாட்டில் தற்சமயம் 365,951 பேர் வேலையின்றி இருப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய...