மாணவர்களின் 80 வீத வருகையை கருத்தில் கொள்ள வேண்டாம் என அதிபர்களுக்கு கல்வி அமைச்சு அறிவுறுத்தல்!

Date:

டிசம்பரில் 2022 உயர்தர (உ/த) பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் மற்றும் ஜூலை 2020 இல் உயர்தர வகுப்புகளில் சேர்ந்த மாணவர்களுக்கு 80% பாடசாலை வருகையை கருத்தில் கொள்ள வேண்டாம் என  அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பாடசாலை  அதிபர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

நாட்டில் நிலவும் கொவிட் தொற்று, போக்குவரத்து சிரமங்கள் மற்றும் எரிபொருள் நெருக்கடி காரணமாக கல்வி அமைச்சு இந்த முடிவை எடுத்துள்ளது.

உயர்தரத்தில் சித்தியடைந்த மாணவர்களுக்காக இன்று அறிமுகப்படுத்தப்பட்ட வட்டியில்லா கல்விக்கடன் திட்டத்தை தொடர்ந்தும் அமுல்படுத்த தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

உயர்தரத்தில் சித்தியடைந்த மாணவர்களுக்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட பட்டப் படிப்பை அரச சார்பற்ற உயர்கல்வி நிறுவனத்தில் தொடர்வதற்காக 2017ஆம் ஆண்டு முதல் வட்டியில்லா கல்விக் கடன் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இதற்கிடையில், கல்வி அமைச்சகம் 2019/2020உயர்தர முடிவுகளின் அடிப்படையில் தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கான விண்ணப்பங்களை அழைப்பதற்கான கடைசி திகதி  8 நாட்கள் வரை நீடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...