பேராசிரியர் எஸ்.எச்.ஹஸ்புல்லாஹ் மறைந்து, இன்றோடு நான்கு வருடங்கள் பூர்த்தியாகின்றன.
முஸ்லிம் சமூகம் தொடர்பில் ஏராளமான ஆய்வுக் கட்டுரைகளை எழுதியவர். பல நூல்களையும் வெளியிட்டுள்ளார்.
அவரை நினைவு கூர்வதற்கு, நமது சமூகத்தில் மிகச் சிலரே உள்ளனர். இது கவலைக்கிடமான நிலை எனபதுடன் ‘ஈடு செய்ய முடியாத இழப்பு.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக பேரவை உறுப்பினரும், பேராதனைப் பல்கலைக்கழக புவியியல்துறை முன்னாள் சிரேஷ்ட விரிவுரையாளருமான பேராசிரியர் எஸ்.எச்.ஹஸ்புல்லாஹ் மாகாண எல்லை நிர்ணய ஆணைக்குழு உறுப்பினராகவும் செயற்பட்டுள்ளார்.
அத்துடன் மாகாண சபை எல்லை நிர்ணய அறிக்கையில் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக கூறி முஸ்லிம் மக்களுக்கு விழிப்பூட்டல் நிகழ்வுகளை நடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.